பட்டுப்புடவை சரசரக்க, கால்களில் கொலுசும், கைகளில் வளையல்களும் சிணுங்க, நெற்றியில் குங்குமம் சுடரிட்டு நிற்க, கையில் குங்குமச் சிமிழுடன் அப்போதுதான் பறித்து வந்த மலரென ‘பளிச்’சென்று, ஒவ்வொரு வீடாகச் சென்று, “எங்க வீட்ல கொலு வச்சிருக்கோம். அவசியம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிட்டுப் போங்கோ மாமி” எனப் புன்னகை ததும்ப அழைத்துக் கொண்டு வந்த விஜி எங்கள் வீட்டை நோக்கி வருவதைக் கவனித்ததும்,
Continue reading “போலிச் சம்பிரதாயங்கள் – சிறுகதை”பாடம் – கவிதை
சில சொற்களோடு
தொலைந்த
பல மௌனங்களும்
காணாமற் போயின!
இது எப்படி இருக்கு? – சிறுகதை
ராமு நடையை எட்டிப் போட்டான்.
ஐப்பசி மாதத்து மழை பிசுபிசுத்துக் கொண்டிருந்தது. குடையும் கையிலில்லை. சினிமாவுக்குச் செல்லும் அவசரம்.
அம்மாவிடம் கெஞ்சிக் கூத்தாடி நண்பர்களுடன் செல்வதாகப் பர்மிஷன் வாங்கிக் கொண்டு கிளம்புவதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது அவனுக்கு.
Continue reading “இது எப்படி இருக்கு? – சிறுகதை”போலி கௌரவம் – கவிதை
வரிகளுக்காக
பூனைகள் போட்டுக் கொண்டன
பெருஞ்சூடு!
பின்னொரு நாளில்…
அந்த மழை நாளின் பின்னொரு நாளில்
இலகுவாய் குடை விரித்து நின்றன
காளான்கள் ஈர நசநசப்பிலும்…