அழியும் பறவைகள்

பறவைகள்

சில மாதங்களுக்கு முன் எங்கள் வீட்டு வராண்டாவில் உள்ள ‘டியூப் லைட்’டில் இருந்த இடைவெளியில் இரண்டு குருவிகள் கூடு கட்டிக் குடியிருந்தன.

சில நாட்களில் மூன்று முட்டைகள் கூட்டில் இருந்தன. குருவிகள் அவற்றைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்து வந்தன.

ஒரு சில தினங்களில் முட்டை பொரித்து, மூன்று குஞ்சுகள் கூட்டிற்குள் இருந்தன. குருவிகளின் நடவடிக்கையைப் பார்த்து ஒன்று தாய்க் குருவி, மற்றொன்று தந்தைக் குருவி என்று அறிந்தோம்.

நாங்கள் குடும்பத்துடன் வராண்டாவில் இருந்த நாள்களில்கூடக் குருவிகள் சிறிதும் அச்சம் அடையவில்லை; பாதுகாப்பு உணர்வோடு மகிழ்ச்சியாக இருந்தன. Continue reading “அழியும் பறவைகள்”

அட! தங்கமே……….. தங்கம்

தங்கம்

இந்தியாவில், கையில் கழுத்தில் கிடக்கும் நகையிலிருந்து, கோயில் கலசங்கள் முதல், சேலை ஜரிகை வரை தங்கம் இருக்கிறது.

தங்கத்தால் செல்போன் போன்ற எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தங்க பஸ்ப லேகியம் போன்ற மருந்துகளில் தங்கத்தைப் பயன்படுத்துகின்றனர்.

பல் போன பெரியவர்கள் தங்கத்தால் பல்செய்து மாட்டிக் கொண்டு சிரித்து மகிழ்கின்றனர்.

ஏழை அன்புத் தாய் தன் குழந்தையை என் தங்கமே…… பொன்னே! என்று அன்பு ஒழுகக் கொஞ்சி மகிழ்கிறாள்; தங்கள் பிள்ளைகளுக்குத் தங்கம், பொன், கனகம் எனப் பெயர் சூட்டி மகிழ்கின்றார். Continue reading “அட! தங்கமே……….. தங்கம்”

பூஜ்ஜியம் வழங்கிய ராஜ்ஜியம்

பூஜ்ஜியம்

இந்தியாதான் பூஜ்ஜியம் வழங்கிய ராஜ்ஜியம். கணித சாஸ்திரத்தில் கிரேக்கமும், இந்தியாவும் உலகிற்கு வழங்கிய நன்கொடைகள் ஏராளம்.

இந்திய வரலாற்றில் பழங்காலத்திலேயே ஆரிய பட்டரும், பிரம்ம குப்தரும், பாஸ்கரரும், புதையனாரும் இன்றைய கணித மேதைகளுக்கு வியப்பைத் தருகின்ற அளவிற்குப் பல்வேறு கணக்கீட்டு முறைகளையும், சூத்திரங்களையும், ஆய்ந்தவர்கள். Continue reading “பூஜ்ஜியம் வழங்கிய ராஜ்ஜியம்”

நமது கிராமங்கள்

கிராமங்கள்

இந்தியா பல ஆயிரம் கிராமங்கள் உள்ள நாடு. நம் நாட்டுத் தந்தை காந்தியடிகள் இந்தியாவின் முதுகெலும்பு கிராமங்கள் என்று கூறினார்.

அவருடைய திட்டங்கள் யாவும் கிராமத்தை மையப்படுத்தியதாகவே இருந்தன. அவருடைய கிராமியப் பொருளாதாரக் கொள்கை உலகப் பொருளாதார அறிஞர்களால் இன்றும் பாராட்டப்பட்டு வருகிறது. Continue reading “நமது கிராமங்கள்”

பூமி – பிரமிப்பூட்டும் தகவல்கள்

பூமி

சில மாதங்களுக்கு முன்னர் தரையில் பாய் விரித்துப் படுத்துக் கொண்டிருந்தேன். சட்டென ஒரு நினைவு வந்தது.

நான் படுத்திருக்கும் பூமியின் இந்தப் பகுதியின் ஆழத்தில் என்ன இருக்கும் என எண்ணத் தொடங்கினேன்.

மண் – கல் – தண்ணீர் – கச்சா எண்ணெய் – நெருப்பு – இது மையப் பகுதி. அதனையடுத்து… என்று கற்பனை செய்ய ஆரம்பித்து விட்டேன். Continue reading “பூமி – பிரமிப்பூட்டும் தகவல்கள்”