எந்த எரிநட்சத்திரமும் வழிகாட்டவில்லை; எந்தத் தீர்க்கத்தரிசியும் முன்னறிவிப்பைச் செய்யவில்லை. கோடான கோடி குழந்தைகள் மண்ணில் பிறப்பெடுப்பதைப் போன்றே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியும் பிறந்தார்.
பின்னர், எல்லாரைப் போன்றில்லாமல் மகாத்மா காந்தியாக அவர் பரிணாமம் பெற்றதென்பது ‘உண்மை’ என்னும் ஒற்றைப் புள்ளியில் தன் வாழ்க்கைப் படகைச் செலுத்தியதால்தான்.
யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற
– திருக்குறள்