உலகின் பசுமை நாடுகள் 2020

உலகின் பசுமை நாடுகள் 2020

உலகின் பசுமை நாடுகள் 2020 பட்டியலை யேல் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழங்கள் இணைந்து ஆய்வு நடத்தி சமீபத்தில் வெளியிட்டுள்ளன.

இந்த ஆய்விற்கு 180 நாடுகளின் சுற்றுசூழல் மற்றும் அதனுடைய செயல்திறன் கணக்கில் கொள்ளப்பட்டன.

இப்பட்டியலில் முதல் பத்து இடங்களை ஐரோப்பிய நாடுகள் பிடித்துள்ளன. இப்பட்டியலில் இந்தியா 169-வது இடத்தையும், ஐக்கிய அமெரிக்கா 24-வது இடத்தையும், சீனா 120-வது இடத்தையும், பாகிஸ்தான் 142-வது இடத்தையும் பிடித்துள்ளன.

Continue reading “உலகின் பசுமை நாடுகள் 2020”

தாயின் மணிக்கொடி – சிறுகதை

தாயின் மணிக்கொடி

தாயின் மணிக்கொடி பாரீர் அதை தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் என்ற பாரதியாரின் பாடலை, தன்னுடைய மகளுக்கு சுதந்திர தினத்தில் பாடுவதற்கு ராகத்துடன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான் பரதன்.

பரதனின் மகள் ரம்யா கோவையின் பெரிய சிபிஎஸ்சி பள்ளி ஒன்றில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள்.

தமிழில் பாடல் முழுவதையும் மனப்பாடம் செய்து ராகத்துடன் பாடுவது என்பது பெரிய தவமாகத்தான் இருந்தது ரம்யாவிற்கு. Continue reading “தாயின் மணிக்கொடி – சிறுகதை”

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்

இரத்தம்

சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்.

டெல்லி வன்முறையில் சிந்திய ரத்தம் இந்து ரத்தமோ, இஸ்லாமிய ரத்தமோ அல்ல; அது இந்திய ரத்தம் என்ற எண்ணம் நம்மிடையே இருக்கும் வரைதான் நம்மிடம் சுதந்திர இந்தியா இருக்கும்.

இந்தியா என்ற புண்ணிய பூமி அன்னியருக்கு அடிமைப் பட்டது எதனால்?

தன்னுடைய பலக் குறைவாலா?

இல்லை; ஒற்றுமை குறைவால். Continue reading “சிந்திய ரத்தம் இந்திய ரத்தம்”

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்

அரசியல் கட்சிகள்

கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர் நமது அணணன் ‍‍‍‍‍‍‍‍___________ அவர்கள்.

எனவே நமது அண்ணனுக்கு நடைபெற இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் _________ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.

ஒரு வாரமாக‌ எந்நேரமும் இந்த வசனத்தைக் கேட்டுக் கொண்டே இருக்கிறேன்.

முப்பொழுதும் காதில் பாலும் தேனும் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.

வடையை வாயில் வைத்திருந்த காகத்தை நரி பாட்டுப் பாட சொன்ன கதை என் மனதில் தோன்றுகிறது. Continue reading “கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர்”

நீதி இல்லாத நாடு இந்தியா

நீதி இல்லாத நாடு இந்தியா

நீதி இல்லாத நாடு இந்தியா என்று ஒரு பெரியவர், தன் அருகில் நின்று கொண்டிருந்த இன்னொரு பெரியவரிடம் சொல்லிக் கொண்டு இருந்தார்.

நகரப் பேருந்தில் நின்று கொண்டு, என் அலைபேசியில் மின்னஞ்சல்களைப் படித்துக் கொண்டே பயணம் செய்த எனக்கும் அது காதில் விழுந்தது.

ஒரு நிமிடம் என் மனம் வேதனையில் துடித்தது.

இது உண்மையா? என்று என் அறிவு யோசித்தது; உண்மை என்றே ஒத்துக் கொண்டது. Continue reading “நீதி இல்லாத நாடு இந்தியா”