யார் தவறு? – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

கடற்கரையில் சுந்தரி பூ விற்றுக் கொண்டிருந்தாள். கடற்கரையில் அவள் வயதை ஒட்டிய சிறுவர்கள் தத்தம் தாய் தந்தையருடன் கடல் அலையோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

Continue reading “யார் தவறு? – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

பாதை மாறிய பாதங்கள் – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை மணி ஒன்பதரை.

ஹாலில் சுற்றும் சீலிங் ஃபேனின் சன்னமான ஒலியைத் தவிர‌ வேறு எந்த சப்தமுமின்றி வீடு ‘கல்’லென்று அமைதியாய் இருந்தது. ஆனால் ஆனந்தியின் மனதில் அமைதி இல்லை. அது பௌர்ணமி நாளின் கடலலைப் போல் பொங்குவதும் வடிவதுமாய் எண்ண அலைகளால் அலைக்கழிக்கபட்டு அமைதியின்றி தவித்தது.

செகன்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் ஆறுவயது மகன் அன்பரசு பள்ளிக்கும், அரசுப் பணியிலிருக்கும் கணவன் சுதாகர் அலுவலகமும் சென்றாகி விட்டது.

Continue reading “பாதை மாறிய பாதங்கள் – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

தனிக்குடித்தனம் – மஞ்சுளா ரமேஷ்

கைவிரல்கள் வேகமாக பூக்களைத் தொடுத்துக் கொண்டிருக்க, அதைவிட வேகமாக வார்த்தைகளை விடுத்துக் கொண்டிருந்தாள் வடிவு தன் கணவனிடம்.

“பொண்ணை பார்த்தோமா? பேசினோமோன்னு இல்லாம, தனியா மணிக்கணக்குல போய் பேசறதுக்கு என்னதான் இருக்குமோ தெரியல? இந்த மாதிரி அநியாயத்தை நான் பார்ததேயில்ல”

எதிரே ஊஞ்சலில் அமர்ந்திருந்த மயில்சாமி, மனைவியை கடிந்தார்.

Continue reading “தனிக்குடித்தனம் – மஞ்சுளா ரமேஷ்”

பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்

பிற்பகல் மூன்று மணி அளவில் செஷனுக்குள் நுழைந்த பிரபாகரிடம் சேகர் கேட்டான்.

“என்ன பிரபாகர், அரைநாள் லீவு எடுத்திட்டு இவ்வளவு லேட்டாய் ஆபிசுக்கு வர்றே?”

Continue reading “பெண் ஒன்று கண்டேன் – ஜானகி எஸ்.ராஜ்”

எரிமலையாகுமோ அனிச்சம்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

காலை மணி ஒன்பதரை.

இரண்டாவது டோஸ் காபிக்காக அடுப்பில் பாலை வைத்துவிட்டு, டபரா டம்ளரை எடுத்து சமையல் மேடையில் வைத்துவிட்டு, ஜீனி டப்பாவை கப்போர்டிலிருந்து எடுக்க முயன்ற சாவித்ரி மாமியின் அறுபத்தைந்து வயது உடல் தடுமாறியது.

தலை சுற்றுவதுபோல் இருந்தது. அழுதழுது ‘தலை’ வலிக்க வேறு செய்தது. எல்லாம் காலையில் கணவர் சாம்பசிவம் அறைந்த அறையாலும் அடித்த அடியாலும் விளைந்தவை.

இருபத்தைந்து வயதில் வாங்க ஆரம்பித்த அறையும் அடியும் இந்த அறுபத்தைந்து வயதிலும் மருமகள், மாப்பிள்ளை வந்தும் பேரன், பேத்திகள் எடுத்தும் இன்னும் நின்றபாடில்லை.

Continue reading “எரிமலையாகுமோ அனிச்சம்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”