உயிர் உருகும் தருணம் – சிறுகதை

ஆறுமுகம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தன் ஒரே மகன் பரணியை வருமானவரித்துறை அதிகாரியாக உருவாக்கி இருந்தார். அவன் திருமணத்தில்தான் சிக்கல்.

பரணி அகல்யா என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.

அகல்யா, பரணி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் சம அந்தஸ்து இளநிலை அதிகாரி. அப்பா இல்லாத பெண். அம்மாதான் உலகம்.

ஆண்–பெண் நட்பு, காதல் இதில் எதிலும் நம்பிக்கை இல்லாதவள். அதனால்தான் போட்டித் தேர்வில் வென்று இந்த இளம் வயதில் அதிகாரியாகி இருக்கிறாள்.

Continue reading “உயிர் உருகும் தருணம் – சிறுகதை”

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

“உங்களை விட்டுவிட்டு நான் தனிமையில் இருக்கப் போகிறேன்”… அதிதீத கோபத்துடன் வரும் திருவிளையாடல் திரைப்பட வசனம்…

“தனியா அழுதுகிட்டு இருக்கா…” என்ற நம் சக உறவுகளைப்பற்றிய உரையாடல்.

தனிமை என்றால் சோகம், விரக்தி, அழுகை என்ற உணர்ச்சிகளே பதிவாக உணரப்படுகிறது….

Continue reading “கூடி வாழ்ந்தால் கோடி நன்மை”

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவி உறவு புனிதமானது. மனித இனத்தின் சிறப்பான வாழ்விற்கு அதுதான் அடிப்படை.

நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்‘ என சொல்வதுண்டு.

ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களது குடும்ப வாழ்க்கையை, அவர்களது குடும்பத்தை எடை போட முடியும்.

இன்றைய நாளில் பெரும்பாலான குடும்பங்களில் தோன்றும் பிரச்சினைகளில் முக்கியமானது கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஊடல், சண்டை அல்லது கருத்து வேறுபாடு.

குடும்பத்தின் சீர்குலைவுக்கு அஸ்திவாரம் அமைப்பதே இத்தகைய போக்குதான்.

இருவருக்குள்ளும் ஒருவித ‘ஈகோ‘ என்று சொல்லப்படும் வறட்டு கௌரவம் தோன்றிக் கொள்ள பிரச்சனை தலைதூக்குகிறது.

Continue reading “கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?”

பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?

பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?

அலைகள் இல்லாத கடல் இல்லை. பிரச்சினைகள் இன்றி வாழ்க்கை இல்லை. ஏழையோ பணக்காரனோ, ஆணோ பெண்ணோ ஒவ்வொருவருமே ஏதாவது ஓர் பிரச்சினையை அன்றாட வாழ்வில் சந்திக்கிறார்கள்.

பிரச்சினையின் விதமும், தீவிரமும் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன.

பிரச்சினையை நாம் எப்படி சந்திக்கிறோம்? அல்லது ஏற்படுத்திக் கொள்கிறோம்?

நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் கூர்ந்து கவனிப்போமேயானால் சரியான விடை கிடைத்து விடும்.

Continue reading “பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?”