Tag: ஜானகி எஸ்.ராஜ்

மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் (Ministry of Education, Govt. of India) இயங்கும் “கேந்திரிய வித்யாலயா”- 1, திருச்சி பள்ளியில் 41 ஆண்டுகள் (1969 -.2010) வேதியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

அனைத்து மாத இதழ்களிலும், மாதமிருமுறை மற்றும் நாளிதழ்களிலும் இவரது கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள், நேர் காணல், சமூகத்தில் காணப்படும் பிரச்னைகள், குறைகள் போன்றவைகள் இடம் பெற்று வருகின்றன.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற பிரச்னைகள் மற்றும் குறைகளுக்குத் தீர்வுகளும் கிடைத்திருக்கின்றன.

ஆனந்த விகடன், கல்கி, கோகுலம் (ஆங்கிலம், தமிழ்) இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கையர் மலர், மங்கை, தங்க மங்கை, பெண்மணி, சாவி, குமுதம். வாசுகி, தாய், சுபமங்களா, பாக்யா, தேவி, ராஜம், சிறுகதைக் கதிர், முத்தாரம், கல்கண்டு, ஐஸ்வர்யா, உரத்த சிந்தனை, “இனிது”- இணைய இதழ் போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் பல பிரசுரமாகியிருக்கின்றன / பிரசுரமாகி வருகின்றன.

தினமலர், தினத்தந்தி, .தினமணி, தினபூமி, THE HINDU, மாலை முரசு, மாலை மலர், தமிழ் முரசு போன்ற நாளிதழ்களில் தொடர்ந்து படைப்புகளை வழங்கி வருபவர்களில் இவரும் ஒருவர். கதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், ஜோக்குகள் என இவரது பல படைப்புகள் பரிசுகளும் பெற்றிருக்கின்றன.

1986 – ல் எழுத்துலகில் அறிமுகமாகி இன்று வரை பல்வேறு பத்திரிக்கைகளில் இவர் தொடர்ந்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது!

  • சவால்!

    சவால்!

    திருச்சி புறநகர்ப் பகுதியிலிருந்த அப்பெரிய நிறுவனத்தில் ஸ்டெனோ கிராபர் இன்டர்வியூக்காக காலை ஏழு மணிக்கே வீட்டை விட்டு கிளம்பி பஸ்சில் சென்று கொண்டிருந்தான் தினேஷ்.

    (மேலும்…)
  • குடைபோல் நீ

    குடைபோல் நீ

    நெருப்பை அள்ளிக் கொட்டினாற் போல் வெய்யில் தகித்துக் கொண்டிருக்கிறது.

    (மேலும்…)
  • இரட்டை சந்தோஷம்

    இரட்டை சந்தோஷம்

    ஜி.எம். பதவிக்கான நேர்முகத் தேர்வில் கடைசியாக வந்த இளைஞன் அருணை அந்நிறுவனத்தின் எம்.டி. ஜெகதீசனுக்கு ரொம்பவும் பிடித்து விட்டது.

    (மேலும்…)
  • தனி மரமும் தோப்பு ஆகும்

    தனி மரமும் தோப்பு ஆகும்

    “இதைவிட சூப்பர் இடம் அமையாது பிரகாஷ். எதற்காக இந்தக் குடும்பம் சரிப்படாதுங்கறே! ஒரே பெண், பிக்கல், பிடுங்கல் இல்லை. பெண்ணின் அப்பா அம்மாவும் ரொம்ப நல்ல மாதிரியா இருக்காங்க. சொந்த வீடு, நிறைய பணம் இருக்கு. எல்லாமே பெண்ணுக்குத்தான். நாம் கேட்கிற சீர் எல்லாம் செய்ய ஒத்துக்குறாங்க. பெண்ணும் லட்சணமா இருக்கா..”

    (மேலும்…)
  • தப்பாய் ஒரு கௌரவக் கணக்கு

    தப்பாய் ஒரு கௌரவக் கணக்கு

    ஷியாம் வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன. விஷயம் இதுதான்.

    (மேலும்…)