முட்டாள் தினம் – ஏப்ரல் 1

முட்டாள் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் தேதி அகில உலக அளவில் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் மக்கள் வேடிக்கையாக ஜோக்குகள் அடித்தும், மற்றவர்களை முட்டாள்களாக்கியும், விளையாடி மகிழ்வார்கள்.

ஏப்ரல் முதல் தேதி வருவதற்கு ஓரிரு நாட்கள் முன்னதாகவே, மற்றவர்களை எந்த வகையில் முட்டாளாக்கி மகிழ்வது என்பதைத் திட்டமிட்டுக் கொள்கின்றனர்.

Continue reading “முட்டாள் தினம் – ஏப்ரல் 1”

கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவி உறவு புனிதமானது. மனித இனத்தின் சிறப்பான வாழ்விற்கு அதுதான் அடிப்படை.

நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம்‘ என சொல்வதுண்டு.

ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்தே அவர்களது குடும்ப வாழ்க்கையை, அவர்களது குடும்பத்தை எடை போட முடியும்.

இன்றைய நாளில் பெரும்பாலான குடும்பங்களில் தோன்றும் பிரச்சினைகளில் முக்கியமானது கணவன் மனைவிக்குள் ஏற்படும் ஊடல், சண்டை அல்லது கருத்து வேறுபாடு.

குடும்பத்தின் சீர்குலைவுக்கு அஸ்திவாரம் அமைப்பதே இத்தகைய போக்குதான்.

இருவருக்குள்ளும் ஒருவித ‘ஈகோ‘ என்று சொல்லப்படும் வறட்டு கௌரவம் தோன்றிக் கொள்ள பிரச்சனை தலைதூக்குகிறது.

Continue reading “கணவன் மனைவி உறவு எப்படி இருக்க வேண்டும்?”

பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?

பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?

அலைகள் இல்லாத கடல் இல்லை. பிரச்சினைகள் இன்றி வாழ்க்கை இல்லை. ஏழையோ பணக்காரனோ, ஆணோ பெண்ணோ ஒவ்வொருவருமே ஏதாவது ஓர் பிரச்சினையை அன்றாட வாழ்வில் சந்திக்கிறார்கள்.

பிரச்சினையின் விதமும், தீவிரமும் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன.

பிரச்சினையை நாம் எப்படி சந்திக்கிறோம்? அல்லது ஏற்படுத்திக் கொள்கிறோம்?

நம்மை சுற்றியிருப்பவர்களை நாம் கூர்ந்து கவனிப்போமேயானால் சரியான விடை கிடைத்து விடும்.

Continue reading “பிரச்சினைகளை சமாளிப்பது எப்படி?”

சப்தமும் இரைச்சலும் – ஓர் பார்வை

சப்தமும் இரைச்சலும்

மனிதன் இன்று இரைச்சலும் சப்தமும் சூழ்ந்த சூழ்நிலைக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறான். எங்கு காணினும் சப்தம், இரைச்சல்.

பொழுது புலர்ந்தது முதல் தலைதூக்கும் இந்த பிரச்சனை, நாள் முழுக்கத் தொடர்ந்து இரவு ஆகியும் தீராமல் மனித வர்க்கத்தை ஆட்டிப் படைக்கிறது.

இரண்டு சக்கர வாகனங்ககள் முதல் நான்கு சக்கர வாகனங்கள், விமானம், பேருந்து, ரேடியோ, டி.வி., தொழிற்சாலை யந்திரங்கள், ரயில், மைக் மூலம் ஏற்படுத்தப்படும் சப்தம் என பல்வேறு வகைகள் மூலம் சப்தத்தின் இம்சை தாங்க முடியாமல் நாம் அன்றாடம் தவித்து வருகிறோம். இதுவே ஒலி மாசுபாடு ஆகும்.

Continue reading “சப்தமும் இரைச்சலும் – ஓர் பார்வை”

தென்னையைப் பெற்றால் இளநீர்

தென்னைப் பெற்றால் இளநீர்

தென்னை மரம் கடற்கரை ஓரங்களிலும், மணற்பாங்கான பகுதிகளிலும் ஏராளமாக ஓங்கி செழித்து வளரக்கூடியது.

இது 100 அடி உயரம் வளர்வது மட்டுமின்றி, நூறாண்டுகள் வரையிலும் வளரக் கூடியது. தென்னங்கன்றை நட்ட ஏழாவது ஆண்டு முதல் வருடந்தோறும் பூக்கள் பூக்கத் தோன்றும்.

இந்தியாவில் மக்கள் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ‘கற்பக விருட்சம்’ என தென்னையை அழைக்கிறார்கள்.

Continue reading “தென்னையைப் பெற்றால் இளநீர்”