Tag: ஜானகி எஸ்.ராஜ்

மத்திய அரசின் கல்வித் துறையின் கீழ் (Ministry of Education, Govt. of India) இயங்கும் “கேந்திரிய வித்யாலயா”- 1, திருச்சி பள்ளியில் 41 ஆண்டுகள் (1969 -.2010) வேதியியல் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

அனைத்து மாத இதழ்களிலும், மாதமிருமுறை மற்றும் நாளிதழ்களிலும் இவரது கட்டுரைகள், சிறுகதைகள், துணுக்குச் செய்திகள், நேர் காணல், சமூகத்தில் காணப்படும் பிரச்னைகள், குறைகள் போன்றவைகள் இடம் பெற்று வருகின்றன.

மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற பிரச்னைகள் மற்றும் குறைகளுக்குத் தீர்வுகளும் கிடைத்திருக்கின்றன.

ஆனந்த விகடன், கல்கி, கோகுலம் (ஆங்கிலம், தமிழ்) இதயம் பேசுகிறது, குங்குமம், மங்கையர் மலர், மங்கை, தங்க மங்கை, பெண்மணி, சாவி, குமுதம். வாசுகி, தாய், சுபமங்களா, பாக்யா, தேவி, ராஜம், சிறுகதைக் கதிர், முத்தாரம், கல்கண்டு, ஐஸ்வர்யா, உரத்த சிந்தனை, “இனிது”- இணைய இதழ் போன்ற முன்னணிப் பத்திரிக்கைகளில் இவரது படைப்புகள் பல பிரசுரமாகியிருக்கின்றன / பிரசுரமாகி வருகின்றன.

தினமலர், தினத்தந்தி, .தினமணி, தினபூமி, THE HINDU, மாலை முரசு, மாலை மலர், தமிழ் முரசு போன்ற நாளிதழ்களில் தொடர்ந்து படைப்புகளை வழங்கி வருபவர்களில் இவரும் ஒருவர். கதைகள், கட்டுரைகள், துணுக்குச் செய்திகள், ஜோக்குகள் என இவரது பல படைப்புகள் பரிசுகளும் பெற்றிருக்கின்றன.

1986 – ல் எழுத்துலகில் அறிமுகமாகி இன்று வரை பல்வேறு பத்திரிக்கைகளில் இவர் தொடர்ந்து எழுதி வருவது குறிப்பிடத்தக்கது!

  • பாசம்!

    பாசம்!

    அலுவலக வேலை நிமித்தம், சென்னை சென்றுவிட்டு அன்று காலைதான் திருச்சி திரும்பினேன்.

    வீட்டுக்கள் நுழையும்போதே சாருக்குட்டி என் கால்களைக் கட்டிக் கொண்டு “அங்கிள்! நாணுத்தாத்தா சாமி கிட்டப் போயிட்டார் தெரியுமா?’” என கீச்சுக் குரலில் சொன்னதும் அதிர்ச்சியாய் இருந்தது.

    என்னால் நம்ப முடியவில்லை. இல்லை ஜீரணிக்க முடியவில்லை.

    (மேலும்…)
  • பன்னீரின் பயன்பாடுகள்

    பன்னீரின் பயன்பாடுகள்

    ரோஜாப்பூ!

    மிக அழகான பெயரைக் கொண்ட இம்மலரிலிருந்து தயாரிக்கப்படுவது தான் பன்னீர்! பன்னீரைப் பயன்படுத்துவது தொன்று தொட்டு உலகளவில் இருந்து வருகிறது.

    மனதிற்கினிய ரோஜா நறுமணத்துடன் கூடிய பன்னீர் முதன் முதலாகத் தோன்றிய இடம் பெர்சியா.

    (மேலும்…)
  • கடவுள் மனிதனைப் படைத்த போது!

    கடவுள் மனிதனைப் படைத்த போது!

    கடவுள் முதன் முதலாக கழுதையைப் படைத்து, “நீ பூமியில் கழுதை என்ற பெயரில் கடுமையாக உழைத்துக் கொண்டிருப்பாய். பொதி சுமந்து கொண்டும் புற்களை உணவாகக் கொண்டும் எவ்வித அறிவும் சாதுரியமுமின்றி சுமார் 50 வருடங்கள் இருப்பாய்” என்று கூறினார்.

    கழுதையோ “ஐயா, 50 வருடங்கள் ரொம்ப அதிகம். 20 வருடங்கள் போதுமே” என்றது.

    (மேலும்…)
  • ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

    ஆரோக்கிய வாழ்விற்கு பப்பாளி சாப்பிடுங்கள்! – ஜானகி எஸ்.ராஜ்

    பப்பாளியின் பிறப்பிடம் மத்திய அமெரிக்கா ஆகும். பதினாறாம் நூற்றாண்டின் வாக்கில் டச்சு வியாபாரிகளால் இந்தியாவில் பப்பாளி அறிமுகமானது. பிறகு தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பப்பாளி பயிரிட ஆரம்பித்தனர்.

    இப்போது உலகின் பல்வேறு நாடுகளிலும் குறிப்பாக இந்தியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், தென்அமெரிக்கா போன்ற நாடுகளில் பயிரிடப்படுகிறது.

    (மேலும்…)
  • ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்

    ஒரு தேனான விஷயம்! – ஜானகி எஸ்.ராஜ்

    தேனீக்களால் பல்வேறு மலர்களிலிருந்து தேன் சேகரிக்கப்படுகிறது என்பது தெரிந்த விஷயமே.

    ‘தேன் உடல் ஆரோக்கியத்தை சீர்படுத்தி நீண்ட ஆயுளுடன் நாம் வாழ பயன்படுகிறது’ என்கிறார் இயற்கை விஞ்ஞான தந்தை அரிஸ்டாடில்.

    (மேலும்…)