மங்கம்மாள் பாட்டி – தொடர்கதை

மங்கம்மாள் பாட்டி – தொடர்கதை

கடலை எடுப்பதற்கு ஆட்களைக் கூட்டிக் கொண்டு வேகமாக விரைந்து கொண்டிருந்தாள் தனம்.

‘கடலை போட்டிருக்கும் பிஞ்சைக் காட்டுக்கு இன்னும் ரெண்டு கிலோ மீட்டர் போகணும்.

காட்டுக்குப் போற வழியில அம்மையப்புரத்தில நாலு ஆளகள மாடசாமி கூட்டிட்டு வந்தா பரவாயில்ல.

இப்ப நம்மளோட வர்ற மூணு ஆளுகளையும் சேர்த்து மொத்தம் ஏழு பேரு ஆயிருவாக. நட்ட பாதி இடத்து கடலைய இன்னைக்கு புடங்கிடலாம்.’ என்று எண்ணியபடி அவள் நடந்தாள்.

Continue reading “மங்கம்மாள் பாட்டி – தொடர்கதை”

சைக்கிள் – சிறுகதை

சைக்கிள் - சிறுகதை

‘சைக்கிள் வாங்குவது’ என்பது அருணகிரியின் குழந்தைகள் ஒவ்வொருத்தருடைய பல வருட‌ கனவு.

ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருந்த அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் எல்லோரும் படித்தார்கள்.

முதலாவதாக அந்த பள்ளியில் போய் சேர்ந்தது மூத்த மகன்  இசக்கி. அடுத்து இரண்டு ஆண்டுகள் சென்று இரண்டாவது மகன் வேலன்.

இவ்வாறு இரண்டு இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் பிள்ளைகள் ஒவ்வொருத்தரும் போய் அந்த பள்ளியில் சேர்ந்தார்கள். கடைசியாக கடைக்குட்டி கல்யாணியும் வந்து சேர்ந்தாள். 

Continue reading “சைக்கிள் – சிறுகதை”

கிராமம் – இயற்கையோடு இணைந்து வாழ்தல்

இயற்கையோடு இணைந்து வாழ்தல்

இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது இன்றைய காலத்தின் கட்டாயம். உலக வெப்பமயமாதல் என்ற கத்தி மனித சமூகத்திற்கு மேலே தொங்கிக் கொண்டு இருக்கின்றது.

இன்றைய தலைமுறை இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பதைப் புறக்கணித்தால், மனிதன் பூமியில் வாழ்ந்தான் என்று எதிர் காலத்தில் பிற உயிரினங்கள் நினைத்துப் பார்க்கும் நிலை வரலாம்.

இயற்கையிலிருந்து நாம் வெகுதொலைவுக்கு வந்து விட்டோம் என்று இன்றைய தலைமுறை நினைக்கலாம். ஆனால் 30 ஆண்டுகளாகத்தான் நாம் நிறைய மாறி விட்டிருக்கிறோம்.

நம் வாழ்வில் மிக வேகமாகப் பயணம் செய்கிறோம். ஆனால் போகும் பாதை சரிதானா என்ற கேள்வி இப்போது எழுகிறது.

நமக்கு முந்தைய தலைமுறையினருக்கு இயற்கையோடு இணைந்து வாழ்தல் என்பது எளிதான ஒன்றாக இருந்தது. அந்த வாழ்க்கை முறையை நமக்கு விளக்குகிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் – இயற்கையோடு இணைந்து வாழ்தல்”

கிராமம் ‍- பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்

கிராமம் கொண்டாட்டம்

கொண்டாட்டம் வாழ்வில் முக்கியமான ஒன்று. இயந்திரத்தனமான வாழ்க்கையை இனிதாக்குவது கொண்டாட்டம்.

இன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது ஒரு முக்கியமான நிகழ்ச்சி. அடுத்ததாக திருமணம், காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகள். கூடவே வேலை செய்யும் இடத்திலான கேளிக்கைகள்.

தனி மனிதர்களைச் சார்ந்த விழாக்களையே நாம் இன்று பெரிதும் காண்கிறோம். அவை சிலரை மகிழ்விக்கும்; சிலரை சோர்வாக்கும்.

அப்படி இல்லாமல் எல்லோரும் எப்போதும் கொண்டாட்டத்திலேயே இருந்தால் எப்படி இருக்கும்?

வாருங்கள்! காலச் சக்கரத்தில் நமது பழைய கிராமத்திற்கு சென்று வருவோம். நம்மை அழைத்துச் செல்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் ‍- பாகம் 2 – என்றென்றும் கொண்டாட்டம்”

கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி

கிராமம் - மகிழ்ச்சி

கிராமம் என்பது சிலர் கூடி வாழும் இடம் என்பதல்ல. கிராமம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாத மகிழ்ச்சியினை வழங்கும் ஓர் உயிர்ச் சூழல்.

இன்றைய வேகமான வளர்ச்சியின் காரணமாக, நமது இளம் தலைமுறையினர் கிராம வாழ்க்கை பற்றி அறியாமல் இருக்கின்றனர். நகரத்தில் இருந்தாலும் கிராம வாழ்க்கையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

இயற்கையோடு இயைந்த கிராம வாழ்க்கை எப்படி இன்பமயமாக இருந்தது என்பதை நமக்கு விளக்கும் விதமாகத் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் இராமமூர்த்தி இராமாநுஜ‌தாசன்.

Continue reading “கிராமம் ‍- பாகம் 1 – விலைக்கு வாங்க முடியாத மகிழ்ச்சி”