“இன்னிக்காவது போறோமே… அய்யா! சூப்பர்…செம ஜாலி” என்று மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல், அவசர அவசரமாக அங்கும் இங்கும் ஓடி சீவி சிங்காரித்து கிளம்பிக் கொண்டிருந்தான் அருள்.
“ஐய்யோ ஆண்டவா!.. டேய், இருடா போலாம்.. சும்மா அரக்க பறக்க குதிக்காத. வெளக்கேத்த விடுறியா?” என்று அவனை அதட்டியவாறே விளக்கினை ஏற்றிக் கொண்டிருந்தாள் அருளின் தாய். ஆனால், அருளுக்கோ இருப்பு
கொள்ளவில்லை.
நீண்ட நாட்களாக அவனுடைய வாளிப் பட்டியலில் அடிகோடிடப்படாமல் இருக்கும் அவனுடைய ஆசை இன்று நிறைவேறப் போகிறது.
ஒன்பதாவது வகுப்பு படிக்கும் அருளைப் போன்ற சிறுவர்கள், ஏன் அருளின் நண்பர்களிடம் கூட துளிர் விட வாய்ப்பே இல்லாத ஒரு ஆசை அருளிடம் வருவானேன்.
Continue reading “ஆலய தரிசனம் – சிறுகதை”