ஆலய தரிசனம் – சிறுகதை

ஆலய தரிசனம்

“இன்னிக்காவது போறோமே… அய்யா! சூப்பர்…செம ஜாலி” என்று மகிழ்ச்சியில் தலைகால் புரியாமல், அவசர அவசரமாக அங்கும் இங்கும் ஓடி சீவி சிங்காரித்து கிளம்பிக் கொண்டிருந்தான் அருள்.

“ஐய்யோ ஆண்டவா!.. டேய், இருடா போலாம்.. சும்மா அரக்க பறக்க குதிக்காத. வெளக்கேத்த விடுறியா?” என்று அவனை அதட்டியவாறே விளக்கினை ஏற்றிக் கொண்டிருந்தாள் அருளின் தாய். ஆனால், அருளுக்கோ இருப்பு
கொள்ளவில்லை.

நீண்ட நாட்களாக அவனுடைய வாளிப் பட்டியலில் அடிகோடிடப்படாமல் இருக்கும் அவனுடைய ஆசை இன்று நிறைவேறப் போகிறது.

ஒன்பதாவது வகுப்பு படிக்கும் அருளைப் போன்ற சிறுவர்கள், ஏன் அருளின் நண்பர்களிடம் கூட துளிர் விட வாய்ப்பே இல்லாத ஒரு ஆசை அருளிடம் வருவானேன்.

Continue reading “ஆலய தரிசனம் – சிறுகதை”

உதவாத காடு – சிறுகதை

உதவாத காடு

“ஐயா, ஐயா” என்று வாசலுக்கு வெளியில் நின்று கூப்பிட்டான் சண்முகம்.

“யாரு தம்பி?” என்றபடி வெளியே வந்தார் குமரைய்யா.

“நான் சண்முகம், மேலத்தெரு பரஞ்சோதி மகன்.”

“என்னப்பா, வீட்ல எல்லாரும் சௌக்கியமா?”

“எல்லாரும் நல்லாயிருக்காங்கய்யா.”

“உள்ளே போகலாம் வா” என்றபடி உள்ளே சென்றார். வீட்டிற்குள்ளிருந்த சோபாவில் அமர்ந்தனர்.

Continue reading “உதவாத காடு – சிறுகதை”

சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி

இந்துமதம் என்பது, தொடக்கம் காண இயலாத பிரம்மாண்டத்தைத் தன்னகத்தே கொண்ட பெருமையுடையதாகும்.

கிளை விரித்தாளும் ஆலமரத்தைப் போன்று ஒன்றே பலவாக மாறும் தன்மையுடையதாகும்.

அறிவைக் கண்டு அடைவதற்கும், பிறப்பின் சூட்சுமத்தை விளங்கிக் கொள்வதற்கும், நிகழ்வுகளில் தெளிவு பெறுவதற்கும் துணையாய் இருப்பது இந்து மதமாகும். Continue reading “சைவ சமயத்தின் முழுமுதல் தளம் – சைவம்.ஓஆர்ஜி”

பரிகாரத் தலங்கள் அறிவோம்

பரிகாரத் தலங்கள் என்பவை, நம்முடைய வாழ்வில் பிரச்சினைகள் தீர வேண்டி, நாம் சென்று வழிபாடு செய்யும் கோவில்கள் ஆகும். தமிழ் நாட்டில் அத்தகைய கோவில்கள் நிறைய உள்ளன.

பரிகாரத் தலங்கள் பற்றி அறிந்து கொள்ள, கீழே உள்ள பட்டியல் உங்களுக்கு உதவும். Continue reading “பரிகாரத் தலங்கள் அறிவோம்”

தேடி வந்த தெய்வம்

தேடி வந்த தெய்வம்

மனநிறைவு என்பது எல்லோருக்கும் அவசியமான ஒன்று. முத்தையா எவ்வாறு மனநிறைவு கொண்டார் என்பதை தேடி வந்த தெய்வம் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளுங்கள்.

கந்தசஷ்டிக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. முத்தையனுடைய அலுவலக நண்பர் குமரனின் திருமணம் திருச்செந்தூரில் நடப்பதாக இருந்தது. Continue reading “தேடி வந்த தெய்வம்”