“உங்களுக்கு நர்வ்ஸ்ல சின்ன ப்ராப்ளம் இருக்கும்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா, ஷாக் ட்ரீட்மெண்ட் தரவேண்டியிருக்கும்.” என்று சொல்வார் மருத்துவர்.
“அய்யோ, டாக்டர்…ஷாக் ட்ரீட்மெண்டா, ரொம்ப பயமா இருக்கு டாக்டர். உயிருக்கு எதுவும் ஆகிடாது இல்லையா? ரொம்ப வலிக்குமா?” இப்படி பல கேள்விகளைக் கேட்டு பதறி விடுவார்கள்.
அதற்குக் காரணம் சில விஷயங்களை அதிகம் நெருங்கவும் முடியாது. அதேசமயம் அவற்றை ஒரேடியாக தவிர்க்கவும் முடியாது.
நெருப்பு, கேஸ் இப்படியானவற்றின் வரிசையில் மின்சாரத்துக்கும் இடம் உண்டு.
மின்சாரம் என்றதும், லைட் முதல் கணினி வரை மின்உபகரணங்களை இயக்குவதற்கான ஆற்றலைத் தருவது என்பதுதான் பலருக்கும் நினைவு வரும்.
ஆனால் மருத்துவ உலகில் சில சிகிச்சைகள் மின்சாரத்தின் உபயோகத்தால் அளிக்கப்படுகிறது. அதுவே மின்சிகிச்சையாகும்.
குறிப்பாக சொன்னால் இயன்முறை மருத்துவத்துறையில்தான் மின்சிகிச்சை அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
மின்சிகிச்சை என்றவுடன் பயப்படவோ அல்லது ஏதாவது ஆகிவிடும் எனநினைத்து சிகிச்சையையேத் தவிர்த்து வாழ்நாள் முழுவதும் வலியோடு வேதனைப்படவோ வேண்டாம் என்பதை விளக்கி விழிப்புணர்வினை ஏற்படுத்துவதே இந்தக்கட்டுரை.