உழைப்பாளர் தினம்

உழைப்பவர் உலகம் எளிதில் வெற்றி பெறும்

நாள்களின் நகர்வு முன்னோக்கிச் செல்ல
நாகரீக பகிர்வு பின்னோக்கித் தள்ள
வறுமைக் கோட்டில் பயணத்தில் உள்ள
வதைப்படும் மானுடம் வளருமோ மெல்ல…

ரோசா மலரின் உதிரத் துளியை
லேசா உறிஞ்சி அத்தர் செய்து
ராசா மக்கள் நுகர்ந்து வாழ
காசும் பார்க்கும் கனவான் முதலை..

Continue reading “உழைப்பாளர் தினம்”

தமிழர் திருநாள்- கவிதை

போக்கிடம் தெரியாமல் போகட்டும் தீக்குணமே
முகையிடம் வண்டாக ஈர்க்கட்டும் நற்குணமே

தீக்கிரை யாகட்டும் தீராத தீவினைகள்
திக்கெட்டும் பரவட்டும் நீங்காத நல்வினைகள்

அரிதாரம் பூசாத ஆதவனும் பார்வையிட
அணையாத அடுப்பினிலே பொங்கட்டும் பொங்கலுமே

Continue reading “தமிழர் திருநாள்- கவிதை”

அன்னை – கவிதை

அன்றொரு நாள்

தாயின் கருவில் தயாளரா யிருந்தோம்
வாயி லொன்பதும் வாய்க்கப் பெற்றோம்
கோயில் கருவறை இதுவென் றுணர்ந்தோம்
நோயில் படுக்கும் நொடியின் பொழுதிலே…

Continue reading “அன்னை – கவிதை”

இடுக்கண் களையும் தமிழே வருக – ‍கவிதை

புத்தாண்டே வருக! வருக!

நெடுநாள் தொடரும் நெடுந்துயர் நீக்கி

நெடுந்தூரம் செல்லும் நதியினைப் போல

வெடுக்கென விடுத்து விடையும் கொடுக்க

இடுக்கண் களையும் தமிழே வருக!

Continue reading “இடுக்கண் களையும் தமிழே வருக – ‍கவிதை”