அன்னக்கிளி – சிறுகதை

அன்னக்கிளி

அன்னக்கிளி எங்கள் கிராமத்தில் வசித்த ஒரே ஒரு திருநங்கை.

அன்னக்கிளி என்பது ஊரார்கள் வைத்த பட்ட பெயர். அதுவே நிலைத்து விட்டது. உண்மையான பெயர் வேலாயுதம்; பூர்விகம் ராமநாதபுரம்.

தான் ஒரு திருநங்கை என்று தெரிந்தவுடன் வீட்டை விட்டு கிளம்பி வந்து, எங்கள் கிராமத்தில் வந்து தங்க ஆரம்பித்து 30 வருடத்திற்கு மேலாகிவிட்டது.

அன்னக்கிளி எங்கள் ஊரின் முக்கிய அங்கம்; என்னதான் எல்லோரும் கிண்டலடித்தாலும், துறுதுறுவென்று வளைய வரும் ஊரின் செல்லப் பிள்ளை.

Continue reading “அன்னக்கிளி – சிறுகதை”

உயிர் உருகும் தருணம் – சிறுகதை

ஆறுமுகம் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. தன் ஒரே மகன் பரணியை வருமானவரித்துறை அதிகாரியாக உருவாக்கி இருந்தார். அவன் திருமணத்தில்தான் சிக்கல்.

பரணி அகல்யா என்ற பெண்ணைக் காதலிக்கிறான்.

அகல்யா, பரணி வேலை செய்யும் அதே அலுவலகத்தில் சம அந்தஸ்து இளநிலை அதிகாரி. அப்பா இல்லாத பெண். அம்மாதான் உலகம்.

ஆண்–பெண் நட்பு, காதல் இதில் எதிலும் நம்பிக்கை இல்லாதவள். அதனால்தான் போட்டித் தேர்வில் வென்று இந்த இளம் வயதில் அதிகாரியாகி இருக்கிறாள்.

Continue reading “உயிர் உருகும் தருணம் – சிறுகதை”

அப்பாவின் காதலி – சிறுகதை

அப்பாவின் காதலி

“மெயின் ரோட்டில் ரெண்டு ஏக்கரில் இருந்த தென்னந்தோப்பை, அலமேலு ஆச்சியின் அழகில் உங்கப்பன் மயங்கி எங்களை ஒரு வார்த்தை கூட கேட்காமல் அடிமாட்டு விலைக்கு வித்துட்டான். எவ்வளவு பெரிய சொத்து தெரியுமா?”

முப்பத்தைந்து வருடமாய் பங்காளிகள் சொல்லும் இந்த வசவை கேட்டு, கேட்டு வளவனுக்கு வெறுத்து விட்டது.

இடம் போனதை பற்றி கவலை இல்லை. அவன் அப்பா பற்றி வரும் வதந்திதான் வளவனுக்கு உறுத்திக்கொண்டு இருக்கிறது.

வளவனின் அப்பா துரைபிள்ளை அந்த காலத்தில் பெரிய படிப்பாளி. அத்தனை திருக்குறளும் அத்துப்படி. வளவனையும் சிறுவயதிலேயே புத்தகம் பக்கம் தள்ளிவிட்டது அவர்தான்.

Continue reading “அப்பாவின் காதலி – சிறுகதை”

மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை

மாடென்று எதனைச் சொல்வீர் - சிறுகதை

“40 ஆயிரத்தை கொடுத்து ஒரு கிழ மாட்டை வாங்கி வந்திருக்கியே?” என்று ஊரில் உள்ள எல்லோரும் மாணிக்கத்திடம் துக்கம் விசாரிப்பது போல் விசாரித்துக் கொண்டிருந்தனர்.

மாணிக்கம் மாடு வாங்குவதில் ஒன்றும் புதிய ஆள் இல்லை. கடந்த 20 வருடமாக பால் கறந்து வியாபாரம் செய்து வருபவர்.

மாணிக்கம் மாடுகளை குடும்ப உறுப்பினர்களாக பாவிப்பார். மாட்டுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதறி விடுவார்.

மாடுகள் வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தாலும் மனிதர்களுக்கு செய்வது போலவே ஈமக்கிரியைகள் செய்து போற்றுவார்.

Continue reading “மாடென்று எதனைச் சொல்வீர் – சிறுகதை”

படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் – புத்தக மதிப்புரை

படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் - புத்தக மதிப்புரை

படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் புத்தகத்தை படிக்க நான் நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டேன்.

ஒரே மூச்சில் படித்து முடிக்க, இது ஒரு நாவலோ வரலாற்றுக் கதையோ காதல் கவிதைகளோ அல்ல.

எழுத்தாளர் பாரதிசந்திரன் அவர்கள் எழுதிய இந்த நூலில் பல்வேறு திசைகளில் இருந்தும் திரட்டப்பட்ட பல்வேறு அறிவார்ந்த விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

24 தலைப்புகளில், 24 கோணங்களில், 24 வெவ்வேறு தளங்களில் அதே சமயம் ஒன்றோடு ஒன்று சம்பந்தமில்லாத, ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைத் தகவல் திரட்டாக இந்தப் புத்தகம் எனக்கு ஒரு புதிய பரிணாமத்தைத் தந்துள்ளது.

Continue reading “படைப்புத் திறனும் ஏற்புக் கோட்பாடும் – புத்தக மதிப்புரை”