பெண் போலீஸ் – சிறுகதை

பெண் போலீஸ்

முதலமைச்சர் கோட்டையிலிருந்து பக்கத்து மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சாலை மார்க்கமாக பயணம் செய்யப் போகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றது.

ஏராளமான ஆண், பெண் போலீஸ்காரர்களை சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்துள்ளார்கள். அப்படித்தான் பெண் போலீஸ் திலகவதிக்கும் இன்று டியூட்டி.

போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையில் அவள் காலை 7 மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறாள். முதலமைச்சரின் கான்வாய் தோராயமாக பதினோரு மணி அளவில் கடக்கக் கூடும் என்று சொல்கிறார்கள்.

Continue reading “பெண் போலீஸ் – சிறுகதை”

ரவா உப்புமா – சிறுகதை

ரவா உப்புமா

நாலுபக்கமும் களிமண்ணாலான சுவர். அதற்கு மேலே தென்னங்கீற்றாலான கூரை, அடுப்பங்கரைக்கு மட்டும், இரு கீற்று மறைப்பு, இதுதான் எங்கள் வீடு.

குளியலறை வீட்டுக்கு அருகிலேயே ஓடிய அரசலாறு. டாய்லெட் – அரசலாற்றின் ஓரம் உள்ள, செடி கொடிகள் மரங்கள் நிறைந்த காட்டுக் கரை.

டாய்லெட் நேரம் ஆண்கள் காலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள். பெண்கள் மாலை 6.30 மணிக்கு மேல் 7.30-க்குள்.

மேலும் லக்னம், ராசி எல்லாம் அவரவர் இஷ்டம். ஏனெனில் இருட்டு நேரத்தில் பாம்பு, பூச்சிகள் போன்றவற்றால் பின்னால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு அவரவர்கள்தான் பொறுப்பு.

Continue reading “ரவா உப்புமா – சிறுகதை”

நல்ல காதல் – சிறுகதை

நல்ல காதல்

காதருகே வந்து “இன்று ஆபீஸ்‌ முடிந்து போகும்‌ போது என்‌ வீட்டுக்கு வந்துவிட்டு போ” என அடிக்குரலில்‌ சொன்னாள்‌ சைந்தவி.

சைந்தவி சொந்த ஊர்‌ பீகார். ஐந்து வயதில்‌ ஒரு மகன்‌ இருக்கிறான். இந்த அலுவலகத்தில், அவள்‌ சினிமா நடிகையை போல்‌ பிரபலமானவள்.

அவள்‌ நிறம்‌, அவள்‌ உடுத்தும்‌ நவ நாகரீக மேட்சிங் உடைகள், ‌வித விதமான ஆபரணங்கள் எல்லாம்‌ சேர்ந்து அவளை ஓர் பேரழகியாக நிலைநிறுத்தி விட்டது.

Continue reading “நல்ல காதல் – சிறுகதை”

விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை

விளிம்பில் நிகழும் அற்புதங்கள்

சுஜித்துக்கு இந்த உணவு டெலிவரி செய்யும் வேலை சுத்தமாக பிடிக்கவில்லை. அப்பா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் இந்நேரம் எம் பி ஏ படித்து முடித்திருப்பான்.

எவ்வளவு வைத்தியம் பார்த்தும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. எம் பி ஏ இரண்டாவது செமெஸ்டரிலேயே அப்பா இறந்துவிட்டார். அப்பாவுடன் ஆஸ்ப்பிட்டலில் இருந்ததால் ஒரு சில பேப்பரை தவிர எல்லாமுமே அரியர்.

நீச்சல் தெரியாதவனை நடுக்கடலில் தூக்கி போட்டது போல், காலம் சுஜித்தை தூக்கி எறிந்து விட்டது. உடனடியாக இந்த வேலைதான் கிடைத்தது.

அப்பாவின் டூ வீலரை ஆசைக்கு கூட ஓட்டிப் பார்க்கத் தரமாட்டார். இப்போது மொத்த வாழ்க்கையும் இந்த டூ வீலரில் கழிகிறது.

Continue reading “விளிம்பில் நிகழும் அற்புதங்கள் – சிறுகதை”

மாவுக்கட்டு – சிறுகதை

மாவுக்கட்டு

சண்முகத்திற்கு வரன் பார்த்த எண்ணிக்கை, பெண் பார்க்கும் படலம் எல்லாம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறும் அளவுக்குப் போய் விட்டது.

காரணம் அவனுடைய கரடுமுரடான தோற்றம், முன் வழுக்கை, வீரப்பன் மீசை, சிவந்த கண்கள் இவையெல்லாம் அந்த பெண்களுக்கும், அவன் செய்யும் மத்திய போலீஸ் வேலை அந்தப் பெண்களின் பெற்றோர்களுக்கும் பிடிக்கவில்லை.

Continue reading “மாவுக்கட்டு – சிறுகதை”