உலகொடு நம்மை உறவெனப் பிணிக்கும்
உறுபசை அன்பெனச் சாற்று
(மேலும்…)பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574
எல்லாரும் பொருள்சேர்க்க இயன்றவரை உழைக்கின்றார்
என்றாலும் இரவினிலே இனிதுறக்கம் பெறுவதில்லை
எல்லாரும் உடல்வருத்தி இரவுபகல் படிக்கின்றார்
என்றாலும் எவரிடத்தும் இனியமொழி உரைப்பதில்லை
எல்லாரும் நகையணிகள் எழிலுடைகள் உடுத்துகின்றார்
என்றாலும் அவர்மனத்தை மறைப்பதற்குத் தெரியவில்லை
எல்லாரும் இனிதிருக்க இழிவுபல புரிகின்றார்
என்றாலும் இனிதிருந்தார் எனவுரைக்க இயலவில்லை
கோயில் மசூதி குருத்துவாரா
கூடும் மக்கள் பொதுக்கூட்டம்
பாயில் நசியும் பழமுடலின்
பத்தி பாடல் முற்றோதல்
நோயில் நுடங்கும் நிணக்காடு
நுவலும் உண்மைப் பேச்செல்லாம்
வாயிற் காலன் வரவறிந்து
வடிக்கும் புலம்பல் வேறிலையே