Tag: பேரினப் பாவலன்

பேரினப் பாவலன் (எ) சாமி.சுரேஷ்
ஆவடி, திருவள்ளூர்
கைபேசி: 8667043574

  • அன்பை அறுவடை செய்!

    அன்பை அறுவடை செய்!

    உலகொடு நம்மை உறவெனப் பிணிக்கும்

    உறுபசை அன்பெனச் சாற்று

    (மேலும்…)
  • உயிர் புரக்க ஓடி வா!

    உயிர் புரக்க ஓடி வா!

    தலைவியின் பிரிவுத்துயரை எண்ணித் தலைவன் பாடும் காதலர் தினக் கவிதை.

    (மேலும்…)
  • பாரதி

    பாரதி

    வானிலவின் கூன்நிமிர்த்தும் பானிலவு ‍ அவன்
    வண்டமிழின் தோள்நிமிர்த்தும் மாத்தகவு
    தேனிலவின் கறையகற்றும் பால்நிலவு -அவன்
    தென்றமிழில் சுவைகூட்டும் தூயமிழ்து

    (மேலும்…)
  • மனக்கோளாறு மனிதன்

    மனக்கோளாறு மனிதன்

    எல்லாரும் பொருள்சேர்க்க இயன்றவரை உழைக்கின்றார்
    என்றாலும் இரவினிலே இனிதுறக்கம் பெறுவதில்லை
    எல்லாரும் உடல்வருத்தி இரவுபகல் படிக்கின்றார்
    என்றாலும் எவரிடத்தும் இனியமொழி உரைப்பதில்லை
    எல்லாரும் நகையணிகள் எழிலுடைகள் உடுத்துகின்றார்
    என்றாலும் அவர்மனத்தை மறைப்பதற்குத் தெரியவில்லை
    எல்லாரும் இனிதிருக்க இழிவுபல புரிகின்றார்
    என்றாலும் இனிதிருந்தார் எனவுரைக்க இயலவில்லை

    (மேலும்…)
  • உயிரச்சம் விலக்கு!

    உயிரச்சம் விலக்கு!

    கோயில் மசூதி குருத்துவாரா
    கூடும் மக்கள் பொதுக்கூட்டம்
    பாயில் நசியும் பழமுடலின்
    பத்தி பாடல் முற்றோதல்
    நோயில் நுடங்கும் நிணக்காடு
    நுவலும் உண்மைப் பேச்செல்லாம்
    வாயிற் காலன் வரவறிந்து
    வடிக்கும் புலம்பல் வேறிலையே

    (மேலும்…)