மதுரையைச் சுற்றி யானைமலை, அரிட்டாபட்டி, கீழக்குயில் குடி, கீழவளவு, குரண்டி மலை, சமணர் மலை, நாகமலை மற்றும் அழகர் மலை ஆகிய எட்டு குன்றுகள் உள்ளன. இவை எண்குன்றங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இவை எண்குன்றங்கள் என்று குழுவாக அழைக்கப்படுவதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள சமணப் படுகைகளும் கல்வெட்டுக்களும் சமண சிற்பங்களும் வரலாற்று தொன்மங்களுமே ஆகும்.
எண்குன்றங்களில் ஒன்றான அரிட்டாபட்டி மதுரையின் வடக்கே 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
(மேலும்…)