யார் சீடன்? – சிறுகதை

யார் சீடன்

யார் சீடன் என்பது ஒரு நல்ல கதை. வாழ்வினை எப்படி அணுக வேண்டும் என்பதை நமக்குச் சொல்லிக் கொடுக்கும் அருமையான கதை. படியுங்கள்! பயன் பெறுங்கள்!

கரும்பையூர் என்ற ஊரில் சோமு, பாபு, கோபு என்ற நண்பர்கள் மூவர் வாழ்ந்து வந்தனர்.

அவர்கள் தங்களுக்குக் குரு ஒருவரைத் தேர்வு செய்து அவரிடம் வாழ்க்கைக் கல்வி கற்க விரும்பினர்.

யாரிடம் கல்வி கற்பது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில், தருப்பையூருக்கு அருகில் சம்பு என்றொரு சாது, ஆசிரம் அமைத்து வாழ்க்கைக் கல்வி கற்பிப்பதை கேள்வியுற்றனர். Continue reading “யார் சீடன்? – சிறுகதை”

உன்னத உறவு

உன்னத உறவு

சத்தமில்லாமல் அறையின் கதவை மெதுவாகத் திறந்தான் குமார். தந்தையின் சட்டைப் பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை தெரியாமல் எடுத்து அறையிலிருந்து விரைந்தான்.

அவன் முகம் மழையில் நனைந்த மரம் மழைநீரைச் சொட்டுவது போல, பயத்தில் வியர்வை சொட்டுக்களை வெளியேற்றியது. இரவு நேரம் என்பதால் அமைதி சூழ்ந்திருந்தது. Continue reading “உன்னத உறவு”

தக்க நேரத்தில் உதவி செய்

தக்க நேரத்தில் உதவி செய்

தக்க நேரத்தில் உதவி செய் என்ற கதை நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

பள்ளத்தூர் என்ற ஊரில் கன்னியப்பன் என்ற வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் தன்னுடைய வியாபாரத்திற்கான பொருட்களைச் சுமப்பதற்கு கழுதையையும், வழிப்பயணத்தின் போது பாதுகாப்பிற்காக நாயையும் வளர்த்து வந்தார். Continue reading “தக்க நேரத்தில் உதவி செய்”

புத்தியைப் பயன்படுத்து

புத்தியைப் பயன்படுத்து

புத்தியைப் பயன்படுத்து என்பது ஒரு நல்ல சிறுகதை. நம் பிரச்சினைகளை சமாளிக்க, நாம் எப்படிப் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும் என்பதை இக்கதை சொல்லிக் கொடுக்கும்.

கதிரும் சந்துருவும் பக்கத்து பக்கத்து வீட்டுக்காரர்கள். கதிர் அமைதியானவர். சந்துரு துடுக்குத்தனம் நிறைந்தவர்.

சந்துரு தனது வீட்டுத் தோட்டத்தில் கோழிகள் நிறைய வளர்த்து வந்தார். தோட்டத்திற்கு வேலிகள் ஏதும் போடவில்லை.

ஆதலால் சந்துருவின் கோழிகள் கதிர் வீட்டிற்குச் சென்று, அருகே இருந்த‌ செடி, கொடிகளை எல்லாம் கிண்டிக் கிளறி பாழாக்கின.

அவருடைய வீட்டு முற்றத்தில் தங்களுடைய கழிவுகளால் அசிங்கப்படுத்தின. Continue reading “புத்தியைப் பயன்படுத்து”

கறையில்லா மனம் – சிறுகதை

கறையில்லா மனம்

அன்று மாலை வழக்கம்போல் மங்கலத்தின் கோபக்கனலில் வார்த்தைகள் கொப்பளித்தன.

“எத்தனமுற சொல்ற‌து. அந்த அருள்மணிகூட சேராத சேராதன்னு. இன்னைக்கும் அவன்கூடத்தான் விளையாடிட்டு வரீயா?”

அமைதியாக புத்தகத்தை எடுத்து அமர்ந்தான் ஆதவன்.

“இங்க ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கேனே, ஒங்க காதுல விழலயா?” என்றாள் கணவனை. Continue reading “கறையில்லா மனம் – சிறுகதை”