பிப்ரவரி 14 – சிறுகதை

பிப்ரவரி 14 - சிறுகதை

முத்துவேல் ஸ்பிளண்டர் பைக்கினை பெட்டி கடையின் ஓரமாக, தான் வழக்கமாக நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு தன் புத்தக பையை எடுத்துக்கொண்டு வேக வேகமாக அருகில் இருந்த பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தான்.

பஸ் ஸ்டாப் அடைந்ததும் அங்கு நின்றவரிடம்

“சார் 7ஜி பஸ் போயிடுச்சா?” என்று கேட்டான்.

“இன்னும் வரல தம்பி.”

“மணி எட்டரை ஆயிடுச்சு. இன்னும் வரலைங்களா?”

Continue reading “பிப்ரவரி 14 – சிறுகதை”

கருணை உள்ளம் – சிறுகதை

கருணை உள்ளம்

ஒரு சமயம் வெளிநாடு செல்ல எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அங்கு ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட போயிருந்தேன்.

அப்போது நான் கண்ட காட்சி.

ஹோட்டலின் வாசலில் ஒரு பெரியவரை விரட்டிக் கொண்டிருந்தார் செக்யூரிட்டி.

பெரியவர் பசியின் காரணமாக வாடி வதங்கி போயிருந்தார்.

Continue reading “கருணை உள்ளம் – சிறுகதை”

கூல் லிப் – புதிய போதை

பெற்றோர்களே உஷார்

பெற்றோர்களே, இளைஞர்களே உஷார் …

படத்தில் காணப்படுவதுதான் கூல் லிப்.

கூல் லிப் இனிப்பு மற்றும் மின்ட் சுவையுடன் கூடிய புகையிலை; தலையணை போல பைகளில் கிடைக்கிறது.

உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால் கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும். இதனால் ஒரு சின்ன ஹாய் கிடைக்கிறது.

Continue reading “கூல் லிப் – புதிய போதை”

கானல் நீர்- சிறுகதை

நிரவியில் ஒரு செல்வந்தர் வீட்டில் உற்றார், உறவினர்கள் நண்பர்கள் என்று அனைவரும் கலந்து கொண்டு தடபுடலாக திருமணம் நடந்து கொண்டிருந்தது.

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அனைவருக்கும் விருந்து உபசரிப்பு நடந்தது.

அந்த ஊரில் பெரிய பெயர் போன சமையல்காரர் மெய்தீன் கைப்பக்குவதில் சமையல் தயாரிக்கப்பட்டு பந்திப் பரிமாறப்பட்டது.

Continue reading “கானல் நீர்- சிறுகதை”

ஆலங்கட்டி – சிறுகதை

அதிகாலை 3 மணி.

“நல்ல காலம் பொறக்குது; நல்ல காலம் பொறக்குது; இந்த வீட்டுக்கு நல்ல காலம் பொறக்குது.

இத்தனை காலம் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் விடிவு காலம் வரப்போகுது. ஜக்கம்மா சொல்றா ஜக்கம்மா சொல்றா.

இந்த வீட்டம்மா மனசுல நினைச்சதெல்லாம் நடக்க போகுது.
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது.”

சத்தம் கேட்டு எழுந்தாள் மாலதி.

Continue reading “ஆலங்கட்டி – சிறுகதை”