எப்போதும் கேட்கும் இன்னிசையே!

எப்போதும் கேட்கும் இன்னிசையே

மொட்டைப்பாறை மொக்கையன்தான்
மொழு மொழுவென்று வளர்ந்தவன்தான்
வெட்ட வெளியில் நிற்பவன்தான்
விண்ணைத் தொட்டிட நினைப்பவன்தான்

Continue reading “எப்போதும் கேட்கும் இன்னிசையே!”

செந்திலும் நானும் – சிறுகதை

செந்திலும் நானும் - சிறுகதை

எதிர் எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக்கொள்ளும் என்கிற இயற்பியல் கோட்பாட்டின்படி தான் எனக்கும் செந்திலுக்குமான பிணைப்பு ஏற்பட்டிருக்கிறது.

எனக்கு பேச்சே பிரதானம், செந்திலுக்கு மௌனமே மூலதனம்.

கடவுள், காதல், கவிதை, இலக்கியம், சினிமா என்று எல்லாமே எனக்கும் செந்திலுக்கும் நேர் எதிர் ரசனைகள்; வாழ்வியல் நடை முறைகள்.

Continue reading “செந்திலும் நானும் – சிறுகதை”

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி

நாங்க பத்து பேரும் கம்மல் வாங்கியது பெரிய சந்தோசமா இருந்துச்சு. கனிக்கு தேர்க்கம்மல் வாங்க நான் கொடுத்த இரண்டு பைசாவ அவ எனக்கு திருப்பிக் கொடுத்தா.

இப்ப என்கிட்ட மொத்தம் ஐந்து பைசா மீதி இருந்தது.

‘காசு வச்சிருக்கவுக வளையல் வேண்னா, வாங்கிக்கலாம்’ன்னு சொர்ணம் சொன்னா.

Continue reading “வளையல் வாங்கியது – மங்கம்மாள் பாட்டி”

நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை

குட்டித் தவளை - சிறுவர் கதை

சோலையூரில் அழகிய குளம் ஒன்று இருந்தது. அக்குளம் நீரால் நிரம்பி வழிந்தது. அக்குளத்தில் தாமரை, அல்லி, குவளை போன்ற தாவரங்கள் காணப்பட்டன.

செந்தாமரை வெண்தாமரை மற்றும் குவளை மலர்களால் பகலிலும், செவ்வல்லி மற்றும் வெள்ளல்லி மலர்களால் இரவிலும் மிகவும் அழகாகக் குளம் காட்சியளித்தது.

அக்குளத்தில் அயிரை, கெண்டை, விரால், தங்கமீன் போன்ற மீன் வகைகளும், தவளைகளும் சந்தோசமாகச் சுற்றித் திரிந்தன.

அக்குளத்தில் சங்கு என்ற குட்டித் தவளை ஒன்று வசித்தது. அது மிகவும் அன்பானது. எல்லோரிடமும் மிகவும் நட்புடன் பழகும்.

Continue reading “நல்ல நண்பர்கள் யார்? – சிறுவர் கதை”

வாய் முகூர்த்தம் – சிறுகதை

வாய் முகூர்த்தம் - சிறுகதை

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பிறகு, நான் அவரை சந்தித்தேன். அவர் வேறு யாரும் இல்லை எனது சித்தப்பாதான்.

என் அப்பாவின் உடன் பிறந்த தம்பி. இருவருக்குள்ளும் தாய் வழி உறவுதானே தவிர, தந்தை வழி உறவு கிடையாது.

எனது இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கி அவரது வீட்டுக்குள் சென்றேன்.

வீட்டில் மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டார் என உறவினர்கள் அமர்ந்திருந்தார்கள்.

அந்த கூட்டத்தில் கூட்டத்தோடு கூட்டமாக அமர்ந்திருந்தார் அவர்.

நான் அவர் அருகில் சென்றுதான் நின்று கொண்டிருந்தேன். ஆனால் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. 

Continue reading “வாய் முகூர்த்தம் – சிறுகதை”