மனதுக்குள் மத்தாப்பு – ஹைக்கூ கவிதைகள்

தன்னுடனே இருந்தும்
தொட இயலவில்லை
காயம்

மகிழ்ச்சி வெள்ளம்
மறைந்து போனது
கலைந்த கனவு

Continue reading “மனதுக்குள் மத்தாப்பு – ஹைக்கூ கவிதைகள்”

ப்ரெண்ட்ஸ் – சிறுகதை

ப்ரெண்ட்ஸ்

மதுரையில் அலுவலக மீட்டிங் முடித்து விட்டு பெரியார் பேருந்து நிலையத்தில், மாட்டுத்தாவணி செல்லும் பேருந்திற்காக அன்றில் காத்திருந்தபோது 22 ஏ பேருந்து வந்தது. பேருந்தில் ஏறி 2-வது சீட்டில் அமர்ந்து மாட்டுதாவணிக்கு டிக்கட் வாங்கினாள்.

கல்லூரியில் பயிலும்போது ஒருநாள் இந்த 22 ஏ பஸ்ஸை பிடிக்க தான் பட்ட கஷ்டங்களையும், அன்றைய நிகழ்வு கற்பித்த பாடமும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதவை.

1999-ம் வருடம் நடந்த நிகழ்வுகள் இன்றும் நினைவில் அப்படியே நிற்கின்றன. பழையவைகளை அப்படியே அசைபோட்டாள் அன்றில்.

Continue reading “ப்ரெண்ட்ஸ் – சிறுகதை”

பிரியங்கா சோப்ரா – சிறுகதை

பிரியங்கா சோப்ரா

ஜம்முக்கும் காஷ்மீருக்கும் நடுவில் இருக்கிறது இந்த ஊர். இங்கு பெருமளவில் எதுவும் தீவிரவாத செயல்கள் நடைபெறுவதில்லை. இருப்பினும், இது தீவிரவாதிகளின் உறைவிடம்.

இங்கு இருந்துதான் எல்லாவற்றையும் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள். அதனால் இங்கு இருக்கும் அனைத்து படைப்பிரிவுகளும் மிகவும் கவனமாக இருக்கும்படி உத்தரவு. Continue reading “பிரியங்கா சோப்ரா – சிறுகதை”

நான் சிறுத்தை பேசுகிறேன்

நான் சிறுத்தை பேசுகிறேன்

என் பெயர் பத்மநாதன் (சிறுத்தை).

நான் சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், என் வாழ்க்கையின் இறுதி தருணங்களில், என் கடைசி மூச்சை நிறுத்தும் வேளையிலாவது என் மனதின் பாரத்தைக் கூற எண்ணியே பேசுகிறேன்…

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சியில் வனவராகப் பணி புரிந்து வரும் திரு.ப.ராஜன் அவர்கள் ஆசிரியராக அமைய‌,

அவரின் நண்பர் செ.செங்கதிர் செல்வன் அவர்கள் கட்டுரைத் தொகுப்பாளராகச் செயல்பட‌,

பத்மநாதன் என்ற சிறுத்தையாகிய நான், என் வாழ்க்கை வரலாறைக் கூறப் போகிறேன்; என்னுடன் வாருங்கள்.

Continue reading “நான் சிறுத்தை பேசுகிறேன்”