எல்லோருக்கும் பெருமை உண்டு என்ற கதை உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சிறப்பு உண்டு என்பதை வலியுறுத்துகின்றது.
ஆதலால் யாரும் யாரையும் சிறுமையாகக் கருதக் கூடாது.
கதையைத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “எல்லோருக்கும் பெருமை உண்டு”
இணைய இதழ்
எல்லோருக்கும் பெருமை உண்டு என்ற கதை உலகில் உள்ள எல்லோருக்கும் ஏதேனும் ஒரு சிறப்பு உண்டு என்பதை வலியுறுத்துகின்றது.
ஆதலால் யாரும் யாரையும் சிறுமையாகக் கருதக் கூடாது.
கதையைத் தொடர்ந்து படியுங்கள். Continue reading “எல்லோருக்கும் பெருமை உண்டு”
அன்று புதன்கிழமை. வாரத்தின் நடுநாள். ஆச்சர்யப்பட வேண்டாம். வாரத்தின் ஐந்து நாட்கள் மட்டுமே வேலைநாளாக உள்ளவர்களுக்கு புதன் கிழமை வாரத்தின் நடுநாள்தான். ஆதலால் நான் மனதளவிலும், உடலளவிலும் மிகவும் சோர்ந்து போயிருந்தேன்.
அன்றைக்கு செங்கோட்டை ரயிலிலிருந்து மதுரை சந்திப்பில் இறங்கி வெளியே வந்து பேருந்திற்காக காத்திருந்தேன். மாட்டுத்தாவணிக்குச் செல்லும் பேருந்து வந்தது.
Continue reading “நம்பிக்கை ஒளி”
ஒரு தந்தையும் மகளும் ஆற்றின் தொங்கு பாலத்தைக் கடக்க முயற்சி செய்தனர்.
தந்தை சொல்கிறார் “என் கையைக் கெட்டியாப் பிடிச்சிக்கோ”
மகள் சொல்கிறாள் “நீங்க, என் கையைப் பிடிச்சிக்கோங்க”
“ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்?” தந்தை கேட்கிறார்.
“நான் உங்கள் கையைப் பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் பதட்டத்தில் கையை விட்டுவிட வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் நீங்கள் பிடித்தால் எந்த ஒரு நிலையிலும் என் கையை விடமாட்டிங்கப்பா” என்றாள் மகள்.
உங்களுக்கும் காலம் வரும் என்ற உண்மையை மறந்து விடாதீர்கள். அதை உணர்த்தும் ஒரு சிறிய கதை.
ஒரு காட்டில் வாத்துக் குடும்பம் ஒன்று இருந்தது. அதில் அம்மா வாத்து முட்டையிட்டு, அடைகாத்துக் குஞ்சு பொறித்தது.
பிறந்த குஞ்சுகள் அனைத்தும் அடர்ந்த, பல வண்ணங்கள் கொண்ட முடியுடன் அழகாவும், துறுதுறுப்பாகவும் இருந்தன.
ஆனால், அதில் ஒரு குஞ்சு மட்டும் மெலிந்து, அழகும் அடர்த்தியும் இல்லாத முடியுடன் அசிங்கமாக இருந்தது.
அதன் குரலும் மற்ற குஞ்சுகள் போல் இல்லாமல் வித்தியாசமாக ஒலித்தது. Continue reading “உங்களுக்கும் காலம் வரும்”
தனிமைதான் எனக்கு நிரந்தரம் என்று ஆனது
யாரிடமும் எதுவும் பகிர்ந்து கொள்ள முடியவில்லை
நலம் கேட்போரின் வார்த்தையில் உயிரோட்டம் இல்லை
சின்ன சின்ன சந்தோசங்களுக்கு மனம் ஆசைப்படுகிறது
ஐந்து வருடம் காப்பாற்றிய கவுரவம் காற்றில் போனது
மௌனத்தை என் மீது திணித்தது வாழ்க்கை
இங்கு எது பேசுவதற்கும் யோசனையாக இருக்கிறது
என் பொறுப்புகளை கையாள வழி தேடுகிறது மனசு
நம்பிக்கை கொண்ட மனத்திற்கு பாதை எங்கும் வழிகள்
என்ற கூற்று என் முன்னே பொய்த்து போனதோ?
கணவனாக, தந்தையாக, மகனாக, நல்ல உறவாக
என் பொறுப்புகள் செய்யப்படாமல் கிடக்கின்றன
சார்ந்து இருந்து பழக்கப்படாத மனது
உறவுகள் செய்யும் உதவியில் தொய்மை அடைகிறது
சோதனைகளை சாதனைகளாக்கும் என் மனதிற்கு
இப்பொழுது ஒய்வு காலமாக இருக்கிறது
மறுபடியும் வாய்ப்பிற்கு காத்திருக்கிறேன் நான்
என் உறவுகளுக்கு என்ன நலமானது பண்ண முடியுமோ
அதனை முடிக்க தருணம் வரும் வரை காத்திருக்கிறேன்
வாழ்க்கை என்னை மறுபடியும் புடம் போடுகிறது
எங்கு வீழ்த்தப்பட்டேனோ அங்கேயே மீண்டும் எழுவேன்
நான் பக்குவப்பட இயற்கை தடைகளைக் கொடுக்கிறது
நான் பக்குவப்பட இயற்கை தனிமையைக் கொடுக்கிறது
இதனை சாபமாகக் கருதாமல் வரமாகக் கொள்வேன்
வெற்றி தோல்வி காரண காரியங்களுக்கு அப்பாற்பட்டவை
என்ற நியதி உணர இயற்கை தனிமை தருகிறது
என்னை சுற்றி எது நடந்தாலும் நடக்கட்டும்
சூழ்நிலையால் பாதிக்கப்படும் கைதியல்ல நான்
வாய்ப்புகளை வரமாக மாற்ற இன்னும்
இனிய பக்குவத்திற்கு காத்திருக்கும் நான்
– சிறுமலை பார்த்திபன்