தக்க நேரத்தில் உதவி செய்

தக்க நேரத்தில் உதவி செய்

தக்க நேரத்தில் உதவி செய் என்ற கதை நாம் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது.

பள்ளத்தூர் என்ற ஊரில் கன்னியப்பன் என்ற வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார்.

அவர் தன்னுடைய வியாபாரத்திற்கான பொருட்களைச் சுமப்பதற்கு கழுதையையும், வழிப்பயணத்தின் போது பாதுகாப்பிற்காக நாயையும் வளர்த்து வந்தார். Continue reading “தக்க நேரத்தில் உதவி செய்”

வாய்விட்டு சிரிங்க – சிறுகதை

வாய்விட்டு சிரிங்க‌

வாய்விட்டு சிரிங்க என்ற கதை நமக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைச் செய்தியைச் சொல்கிறது.

சிரிப்பதும் சிரிக்க வைப்பதுமாக வாழ்கின்றவர்கள் மகத்தானவர்கள் என்பதே அது.

முன்னொரு காலத்தில் உப்பூர் என்ற ஊரில் மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எப்போதும் தங்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் பிறரை சிரிக்க வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

தாங்கள் பிறந்ததே மக்களை சிரிக்க வைக்கத்தான் என்று கருதினர். Continue reading “வாய்விட்டு சிரிங்க – சிறுகதை”

அறிவு உயிர் காக்கும் – சிறுகதை

நரி

அறிவு உயிர் காக்கும் என்பது ஒரு நல்ல‌ சிறுகதை. நாம் கஷ்டமான சூழ்நிலைகளில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை விளக்கும் கதை.

பூங்காவனம் என்ற காட்டிற்கு ராஜாவாக சிங்கம் ஒன்று இருந்தது. அது தனக்கு ஆலோசனை சொல்வதற்கு மூன்று மந்திரிகளை நியமிக்க எண்ணியது.

அதன்படி கரடி, குரங்கு, நரி ஆகியோரை மந்திரிகளாக நியமித்தது. Continue reading “அறிவு உயிர் காக்கும் – சிறுகதை”

சைக்கிளின் வாடகை – சிறுகதை

சைக்கிளின் வாடகை

சைக்கிளின் வாடகை என்ற கதை ஒரு புத்திசாலி வியாபாரியையும், அவரை எதிர்கொள்ளும் புத்திசாலி வாடிக்கையாளரையும் எடுத்துக் காட்டுகின்றது.

வாசு சுறுசுறுப்பான இளைஞன். ஒவ்வொரு ஊருக்கும் சென்று அவ்வூரில் உள்ள இடங்களைப் பார்ப்பதில் வாசுவிற்கு விருப்பம் அதிகம். அதனால் புதிது புதிதாக வெவ்வேறு ஊருக்குச் சென்று கொண்டிருந்தான்.

ஒருசமயம் பம்பையூர் என்ற ஊருக்குச் சென்றான். அவ்வூரில் உள்ள சைக்கிள் கடையில் சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அவ்வூரைச் சுற்றிப் பார்க்க எண்ணினான். Continue reading “சைக்கிளின் வாடகை – சிறுகதை”

பாறை சொன்ன‌ தீர்ப்பு – கதை

பாறை சொன்ன‌ தீர்ப்பு

பாறை சொன்ன‌ தீர்ப்பு என்பது, இறைவன் எப்படியாவது அநீதியை அடையாளம் காட்டுவான் என்று நம்பும் எளிய மக்களின் நம்பிக்கை பற்றிய கதை.

முருங்கையூர் என்ற ஊரில் அழகான கோவில் இருந்தது. அக்கோவிலின் முன்னால் பாறை ஒன்று இருந்தது.

அப்பாறையின் முன்னால் நின்று பொய் சொன்னால் அப்பாறை அவர்களுக்கு தண்டனை கொடுக்கும். ஆதலால் யாரும் பாறையின் முன்பு நின்று பொய் சொல்ல பயந்தனர். Continue reading “பாறை சொன்ன‌ தீர்ப்பு – கதை”