“எனது கதைகள் மாயக் கம்பளம் போன்றவை. பேனா முனையில் இருந்து பிறக்கும் சொற்களைக் கொண்டு அந்த மாயக் கம்பளத்தை நெய்கிறேன். சொற்களின் வழியே மனிதர்களை நேசிக்கிறேன். சந்தோஷம் கொள்ள வைக்கிறேன். மனிதத் துயரங்களை எழுத்தின் வழியே பகிர்ந்து கொள்கிறேன். ஆறுதல் தருகிறேன். மோசமான செயல்களை அழித்து ஒழிக்கிறேன். என் தனிமையின் தோழன் எழுத்துக்கள் மட்டுமே,” என்கிறார் இஸ்மத் சுக்தாய்.
இஸ்மத் சுக்தாய் அவர்கள் உருது மொழியில் எழுதிய சிறுகதைகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது ‘மச்சம்’ எனும் சிறுகதையாகும். இக்கதையைத் தமிழில் ராகவன் தம்பி மொழிபெயர்த்துள்ளார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாக அது இருக்கின்றது.
Continue reading “மச்சம் – இஸ்மத் சுக்தாயின் கலை ஓவியம்”