Tag: நேசம் மறந்திடுமோ நெஞ்சம்

நேசம் மறந்திடுமோ நெஞ்சம் ஒரு நல்ல காதல் தொடர். காஞ்சி தங்கமணி சுவாமிநாதன் அவர்கள் எழுதியது.

  • நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 26

    நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 26

    அந்த அறையில் மெல்ல சுற்றிக் கொண்டிருந்த சீலிங் ஃபேன் சீரான காற்றை பரப்பிக் கொண்டிருக்க, சுவரோரம் கிடந்த கட்டிலில் எலும்பும் தோலுமாய் படுத்துக் கிடந்தார் எழுபத்தி நான்கு வயது முதியவர்.

    கண்கள் மூடியிருக்க மார்பு மட்டும் லேசாய் மேலும் கீழும் ஏறி இறங்கி அவர் உயிரோடிருப்பதை உறுதி செய்து கொண்டிருந்தது.

    அவ்வப்போது நினைவு வருவதும், அப்படி நினைவு வரும்போதெல்லாம் உதடுகள் எதோ சொல்வதுபோல் அசைவதும் சட்டென நினைவு தப்பிப் போவதுமாய் கடந்த ஒன்னரை மாதமாக இப்படியான நிலைதான்.

    (மேலும்…)
  • நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 25

    நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 25

    தாயை இழந்து காதலையும் இழந்து நடைபிணம் போல் ஆகியிருந்தான் ராகவ்.

    நாகர்கோயிலில் தஞ்சமடைந்தவன் அலுவலகம் செல்வதும் தங்கியிருக்கும் இருப்பிடத்துக்கு வருவதுமாய் எந்திரகதியில் இயங்கினான்.

    (மேலும்…)
  • நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 24

    நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 24

    ஆயிற்று பார்வதி மாமி இறந்து இன்று ஆறாம் நாள். வேரறுந்த மரம் போல் கீழே விழுந்தவர் எழுந்திருக்கவே இல்லை.

    தலையில் எண்ணை தடவாததால் பரட்டைத் தலையுமாய் ஷேவிங் செய்யாததால் முள் முள்ளாய் தாடியும் மீசையுமாய் ஒடுங்கிப் போய் தளர்வாய் அமர்ந்திருந்தான் ராகவ்.

    அடிக்கடி மார்பு குலுங்கியது. கட்டுப்பாடின்றி கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. மாமாவும் அத்தையும் பெயருக்குத் துக்கம் விசாரிக்க வந்து போனார்கள்.

    (மேலும்…)
  • நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 23

    நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 23

    இனி எடுக்கப்போகும் எந்த முடிவையும் தன்னைக் கேட்டுத்தான் எடுக்க வேண்டுமென்றும், தான் சொல்வதைத்தான் இனி ரத்தினவேல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டு விட்டுப் போனான் தனசேகர்.

    தனசேகரின் அடிமைபோல் ஆகிப்போனார் ரத்தினவேல்.

    (மேலும்…)
  • நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 22

    நேசம் மறந்திடுமோ நெஞ்சம்? – அத்தியாயம் 22

    மனக்கலக்கத்தோடும் கவலையோடும் யோசனையாய் அமர்ந்திருந்தார் ரத்தினவேல்.

    ‘உண்மையில் தனசேகர் நல்லவனா? கெட்டவனா? முந்தாநாளு அவன் நமக்கு கொடுத்தது பணக்காரார்கள் அருந்தும் சீமச்சரக்கா? அல்லது வெறும் சோடா கலரா? சோடா கலருன்னா நா ஏன் வாந்தியெடுத்து குப்புற விழுந்தேன்.

    (மேலும்…)