மகாகவியின் ஆன்மீகத் தேடல்

மகாகவியின் ஆன்மீகத் தேடல்

மகாகவி பாரதி சுயத்தாலும் கற்றலாலும் பல துறைகளில் ஆழங்கால் பட்டுத் தெளிவடைந்திருந்தார்.

தீர்வுகளின் முடிவுகளை அவர் முன்பே கண்டிருந்தார். கற்றது கொண்டு, கல்லாத எல்லைகளை உய்த்தறிந்து அதன் பால் தீர்மானமாய்க் கட்டுமானங்களை எழுப்பி அழகுற வடிவமைத்திருக்கிறார் அனைத்திலும்.

உலக இலக்கிய நியதிகளையும் அதன் ஆழத்தையும் தேடிப் பிடித்து அதனைப் போல் தாம் சார்ந்த மொழிக்குள் கொண்டு வர அயராது உழைத்திருக்கிறார்.

Continue reading “மகாகவியின் ஆன்மீகத் தேடல்”

பயம் சிறுகதை விமர்சனம்

பயம் சிறுகதை

பயம் சிறுகதை பழனிராகுலதாசன் அவர்கள் எழுதிய நிகழ்காலங்கள் சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஓர் அருமையான கதை.

பயம் ஒரு சிறந்த உளவியல் சிறுகதையாகவும், சமூகச் சிறுகதையாகவும், வட்டாரச் சிறுகதையாகவும், சிறந்த உரைநடைச் சிறுகதையாகவும், நவீன உத்திகள் வெளிப்பட்டு நிற்கும் சிறுகதையாகவும் அமைந்திருக்கின்றது.

கச்சிதமாகப் பொருத்தப்பட்ட கதாபாத்திரங்கள், கதைத்தொடக்கம், கதையில் சிக்கல், உச்சம், விடுவிப்பு, முடிவு எனும் சிறுகதை அமைப்பும், கதைக்களமும், கதைக்கான காலமும் சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சிறுகதை இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாய் இக்கதை விளங்குகின்றது.

Continue reading “பயம் சிறுகதை விமர்சனம்”

தாமரை குறும்படம் விமர்சனம்

தாமரை குறும்பட விமர்சனம்

தாமரை குறும்படம் ஊனமுற்ற மன நோயாளி மகளைக் கொண்ட ஒரு தாயின் பாசப் போராட்டத்தை எடுத்துக் காட்டுகிறது.

பிறப்பின் அதிசயங்களில் அங்கக் குறைபாடும் ஒன்று. அதன் மூலமாகத் தொடர் பிணைப்புகளுள் ஏற்படும் சொல்ல முடியாத துயரங்களும் வேதனைகளும் பல திறத்தன.

Continue reading “தாமரை குறும்படம் விமர்சனம்”