தனிமைக்குத்
துணையானாய்
பலரின் வெற்றிக்குக்
காரணியானாய்!
Continue reading “தனிமைக்கு நீ துணையானாய்!”இணைய இதழ்
மஞ்சுளா ரமேஷ்
காலை மணி ஒன்பதைக் கடந்ததை செல்போனில் பார்த்து தெரிந்து கொண்டார் அண்ணாமலை.
இரவு முழுதும் உறங்கவே இல்லை. என்னவோ படுக்கையில் இருந்து எழுந்து கொள்ளவே பிடிக்காத ஓர் உணர்வு.
‘எழுந்து என்ன செய்ய போகிறோம்?’ என்ற பெரிய கேள்வி வேறு பயத்தை ஏற்படுத்தியது.
எதையோ இழந்தாற் போன்ற ஏக்கமும், பரிதவிப்பும் ஒன்று சேர்ந்து மனசை புரட்டுகிற ஒரு இம்சை. இரவு ஒரு நொடிப் பொழுதும் தூங்க விடாமல் செய்துவிட்டது.
Continue reading “புது அத்தியாயம் – சிறுகதை”கூட்டமில்லா பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்திருந்தாள் சந்தியா. சீறி அடிக்கும் காற்றை ரசித்தவாறு இருக்கையில் சாய்ந்தபடி இருந்தாள்.
அன்று காலை அலுவலகத்தில் மீனா பேசியது, மனதில் ஒலித்தது.
“எவ்வளவு நாள் இப்படியே இருக்கப்போற சந்தியா? உன் தம்பியும் நல்ல வேலையில் சேர்ந்துட்டான். தங்கை மேகாவும் டிகிரி முடிச்சிட்டா. அப்புறம் என்ன?”
Continue reading “தம்பி உடையாள் – சிறுகதை”கவிதா வெகுவாய் தளர்ந்திருந்தாள். சற்றுமுன் வந்த ஃபோன்கால் அவளை அமைதி இழக்கச் செய்தது.
பவித்ரனின் அலுவலக ஃபோன்தான் அது. மீண்டும் அவளது காதில் ஒலித்தது.
“இங்க பாருங்கம்மா, உங்க கணவருடைய நடவடிக்கை ஏதும் சரியில்ல. இதே தனியார் அலுவலகம்னா வேலையைவிட்டு விரட்டியடிச்சிருப்பாங்க. அரசு வேலைன்றதனால பாவபுண்ணியம் பாக்குறோம். இதான் கடைசி. சொல்லி வைங்க.”
“சரி” என்று சொல்லக்கூட திராணியற்று ஃபோனைத் துண்டித்து வைத்தாள்.
Continue reading “முடிவல்ல ஆரம்பம் – சிறுகதை”அரசுப்பள்ளி ஆசிரியர் என கூறிக் கொள்வதில் ஒவ்வொரு ஆசிரியரும் பெருமிதம் அடைவதைப்போல், ஒவ்வொரு மாணவனும் தான் ஒரு அரசுப்பள்ளி மாணவன் எனக் கூறிக் கொள்வதில் பெருமிதம் மிக அடைய வைப்பதே அரசுப்பள்ளியின் தலையாய நோக்கமாகும்.
Continue reading “அரசுப்பள்ளி ஓர் சமூக நிறுவனம்”