நீர் ‍- நேற்றும் இன்றும்

நீரின்று அமையாது உலகு

வேண்டும் போது பொருள் தேடலாம்; இடம் தேடலாம்; பணம் தேடலாம்; ஆனால் ஒன்றை மட்டும் கிடைக்கும் போது பெற்றுச் சேமிக்கவில்லை என்றால், தேவைக்குக் கிடைக்காது.

அது நீர்.

Continue reading “நீர் ‍- நேற்றும் இன்றும்”

பங்குனிப் பொங்கல் மழை – சிறுகதை

யார் கொடுத்து வைத்தவர்? - சிறுகதை

கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பிறந்த ஊரில் பங்குனி மாதம் நடைபெறும் அம்மன் பொங்கல் திருவிழா கொரனா நோய் பரவல் காரணமாக நடைபெறவில்லை.

இந்த வருடம் கொரனாவுக்கான தடை நீக்கப்பட்டதால் திருவிழாவை சிறப்பாக கொண்டாட ஊரில் தீர்மானிக்கப்பட்டது.

ஊரில் உள்ள எல்லோர் வீட்டிலும் வெளியூரிலிருக்கும் விருந்தினர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டது.

என் பெற்றோரும் வெளியூரில் இருக்கும் எனக்கும் என் தம்பிக்கும் அழைப்பு விடுக்க, நாங்கள் இருவரும் அவரவர் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவிற்காக ஆஜரானோம்.

Continue reading “பங்குனிப் பொங்கல் மழை – சிறுகதை”

நீர் சுழற்சி – நீருடன் ஓர் உரையாடல் – 27

நீர் சுழற்சி

“டிக்.. டிக்.. டிக்..” என சுவர் கடிகாரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஒலியை கவனித்தேன்.

கடிகாரத்தைப் பார்த்தேன். நேரத்தை சரியாக காண முடியவில்லை. காரணம் வெளிச்சம் இல்லை.

மின்விளக்கிற்கான பொத்தானை அழுத்தினேன். மின்விளக்கு பளிச்சிட்டது. கடிகாரத்தில், நேரம் 3.20 எனக் காட்டியது.

இது பிற்பகல் நேரம். உடனே, சன்னல் கதவுகளை திறந்து பார்த்தேன். இருட்டாக இருந்தது. சன்னல் வழியே வானத்தை பார்த்தேன்.

கார்மேகம் சூழ்ந்திருந்து. குளிர்ச்சியும் இருட்டும் சேர்ந்திருந்த அந்த பிற்பகல் வேளை எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும்.

Continue reading “நீர் சுழற்சி – நீருடன் ஓர் உரையாடல் – 27”

மாரிக் கால சிந்தனை – கவிதை

மாரி என்றால் மழை என்று பொருள். 2021ம் ஆண்டு சென்னையின் பெருமழை பாதிப்பைப் பார்த்து வருத்தமும் கோபமுமாய் எழுந்த கவிதை.

ஏரி வாய்க்காலைத் தூக்கி விழுங்கியோர்
தப்பிப் பிழைத்த லரிது

காரிகாரி உமிழ்ந்தும் கேட்காத மக்கள்
மாரியால் ஆவார் மாக்கள்

வீடுவீடென்று மாடியில் மாடி கட்டியோர்
நாறுநாறென்று நாறுவரே மாரியால்

Continue reading “மாரிக் கால சிந்தனை – கவிதை”