மாரிக் கால சிந்தனை – கவிதை

மாரி என்றால் மழை என்று பொருள். 2021ம் ஆண்டு சென்னையின் பெருமழை பாதிப்பைப் பார்த்து வருத்தமும் கோபமுமாய் எழுந்த கவிதை.

ஏரி வாய்க்காலைத் தூக்கி விழுங்கியோர்
தப்பிப் பிழைத்த லரிது

காரிகாரி உமிழ்ந்தும் கேட்காத மக்கள்
மாரியால் ஆவார் மாக்கள்

வீடுவீடென்று மாடியில் மாடி கட்டியோர்
நாறுநாறென்று நாறுவரே மாரியால்

Continue reading “மாரிக் கால சிந்தனை – கவிதை”

கனமழையை சமாளிக்கும் வகையில்

வெள்ளம்

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

கனமழையை சமாளிக்கும் வகையில் தமிழ் நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன

இல்லை – 53% (9 வாக்குகள்)

ஆம் – 47% (8 வாக்குகள்)

பூமத்திய ரேகை பற்றி அறிந்து கொள்ளுங்கள்

பூமத்திய ரேகை
பூமத்திய ரேகை அல்லது நிலநடுக்கோடு என்பது பூமியை குறுக்குவாக்கில் இரு சமதுண்டுகளாகப் பிரிக்கும் கற்பனைக் கோடு ஆகும். இக்கோட்டிலிருந்து வடதுருவமும் தென்துருவமும் சமதூரத்தில் இருக்கின்றன.

இக்கோடு புவியை வடஅரைக்கோளம், தென்அரைக்கோளம் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கிறது. இது பூஜ்ஜியம் டிகிரி அட்சரேகை என்று அழைக்கப்படுகிறது. இக்கோடு 5கிமீ அகலத்தில் குறிக்கப்படுகிறது.

Continue reading “பூமத்திய ரேகை பற்றி அறிந்து கொள்ளுங்கள்”

மழைச் சாரல் – கவிதை

மழைச் சாரல்

அந்தி நேரம்

இருள் சூழ்ந்த மேகம்

இன்னிசை யெழுப்பும்

மெல்லிய மழைச்சாரல்

பக்கமேளமாக இடிசத்தம்

அவ்வப்போது பளிச்சிடும்

மின்னல் கீற்று

Continue reading “மழைச் சாரல் – கவிதை”

தினம்தினம் தண்ணீர் தினம்

தினம்தினம் தண்ணீர் தினம்

கண் இமைக்காமல்

பார்க்க வைக்கும் கடலே

அழகாய் வீழும் அருவிகளே

நளினமாய் ஓடும் நதிகளே

ஏறிட்டுப் பார்க்க வைக்கும் ஏரிகளே

குனிந்து பார்க்க வைக்கும் குளங்களே

கீழே பார்க்க வைக்கும் கிணறுகளே

அண்ணாந்து பார்க்க வைக்கும் மழை மேகங்களே

இவையனைத்தும் நீ தானே

இவையனைத்தும் நீ தானே

Continue reading “தினம்தினம் தண்ணீர் தினம்”