வாலைவடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 13

வாலைவடி நீர்

வாலைவடி நீர் பயன்படுத்தினா தான் அந்த வேதிவினை சரியா நிகழும்” என்று கூறினேன்.

“சரிடா, நான் அந்த வேதிவினையை செஞ்சி பாத்துட்டு உனக்கு சொல்றேன்” என்று கூறிவிட்டு அலைபேசியை வைத்தான் நண்பன்.

ஆம், எனது நண்பனுடன் இரும்பு ஆக்சைடு நானோ துகள்களை தயாரிப்பதற்கான வழிமுறைக் குறித்து தான் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது தண்ணி லாரி வரும் சத்தம் கேட்டது.

Continue reading “வாலைவடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 13”

மின்னாற்பகுப்பு நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 12

மின்னாற்பகுப்பு நீர்

மின்னாற்பகுப்பு நீர் (Electrolysed water) மற்றும் அதன் பயன்கள் பற்றி சற்று முன்னர் தான் எதேச்சையாக படித்து அறிந்து கொண்டேன்.

ஆச்சரியப்பட்டேன்.

சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிலிருந்தே ஜப்பானிய மருத்துவ நிறுவனங்களிலும், பின்னர், உலக நாடுகளிலும் பல்வேறு தொழிற்துறைகளில் மின்னாற்பகுப்பு நீர் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் எனக்கு தெரியும்.

இந்த செய்தியை உடனே ’நீருக்கு’ தெரிவிக்க வேண்டும் என்று தோன்றியது.

’என்ன செய்வது’ என்று தெரியவில்லை. இதுவரையிலும் நீர் தான் தானாக என்னிடம் வந்து பேசியது.

Continue reading “மின்னாற்பகுப்பு நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 12”

நன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11

நன்னீர்

ஒரு சிறிய வாளியில் நீர் நிரப்பிக் கொண்டு, கூடவே, ஒரு தட்டில் ஒரு பிடி அரிசியும், ஒரு இட்லியும் எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்குச் சென்றேன்.

மே மாதம், அதுவும் மதியப் பொழுது என்பதால், வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது.

வாளியில் இருந்த நீரை மாடியில் வைத்திருந்த ஒரு அகண்ட வாயுடைய மட்பாண்டத்தில் வழிய வழிய ஊற்றினேன்.

Continue reading “நன்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 11”

நீருடன் ஓர் உரையாடல் 10 – வெந்நீர்

வெந்நீர்

பகல் ஒரு மணி இருக்கும். அது கத்திரி வெயில் காலம் வேறு.

மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. அப்பொழுது நிலவிய வெப்பத்தை தாங்க முடியவில்லை. எனது தலையிலிருந்து காதின் ஓரமாக வியர்வை வழிந்து கொண்டிருந்தது.

வியர்வையை கையால் துடைத்துக் கொண்டு எனது கழுத்தையும் துடைத்தேன். வியர்வை காய்ந்து, உப்பு படர்ந்திருந்தது.

எழுந்து வீட்டின் பின்புறம் சென்றேன். அங்கிருந்த குழாயை திறந்து இரண்டு கரங்களையும் நீட்டினேன். குழாயிலிருந்து ஊற்றிய நீரை பிடித்தேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 10 – வெந்நீர்”

நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்

உவர் நீர்

நாளை திங்கட்கிழமை.

‘நீர் தொழில்நுட்பவியல்’ குறித்து பாடம் எடுக்க வேண்டியிருந்தது. அதற்கான முன் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.

குறிப்பாக, நீரில் இருந்து உப்புக்களை பிரித்தெடுக்கும் முறைகள் பற்றிய தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன்.

“வேலையா இருக்கியா? தண்ணி லாரி வந்திருக்கு. இரண்டு குடம் மட்டும் புடிச்சிட்டு வர்றீயா?” என்று அம்மா கேட்டார்.

“தோ, வர்றேன் மா” என்று கூறி விரைந்து சென்றேன்.

Continue reading “நீருடன் ஓர் உரையாடல் 9 – உவர் நீர்”