சொர்க்க வனம் 22 ‍- கனலியின் உபதேசம்

கனலியின் உபதேசம்

அது முற்பகல் நேரம். கூட்டிற்கு திரும்பியது ஆடலரசு. அங்கு வாக்டெய்ல் இல்லை.

அந்த மரத்தின் மற்றொரு பகுதியில் வாக்டெய்ல் நின்றுக் கொண்டிருந்தது. அதனை கண்டு பிடித்தது ஆடலரசு.

ஆடலரசுவை கண்டதும், “என்ன நண்பா, ஏதாச்சும் முக்கியமான செய்தியா?” என்றுக் கேட்டது வாக்டெய்ல்.

Continue reading “சொர்க்க வனம் 22 ‍- கனலியின் உபதேசம்”

சொர்க்க வனம் 21 – ‍வாக்டெய்ல் கண்ட காட்சிகள்

வாக்டெய்ல் கண்ட காட்சிகள்

சில நாட்கள் கடந்தன.

கனலி அதிகாலையிலேயே வந்து வாக்டெய்லின் உடல்நிலையை பரிசோதித்தது. வாக்டெய்லின் இறகுகளில் காயம் ஆறத் துவங்கியிருந்தது. உடலின் மற்ற பாகங்களில் இருந்த காயங்கள் எல்லாம் முழுவதுமாக ஆறியிருந்தன.

அதனால், வாக்டெய்லின் உடல்நிலை சீராகியிருப்பதை கனலி உறுதி செய்துக்கொண்டது.

வாக்டெய்லும் “வலி ஏதும் இல்லை” என்று கூறியது.

“வாக்டெய்ல், உன்னோட உடல்நிலை சீராகி இருக்கு” என்றது கனலி.

Continue reading “சொர்க்க வனம் 21 – ‍வாக்டெய்ல் கண்ட காட்சிகள்”

சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்

கனலியின் முயற்சிகள்

காலை மணி ஏழு இருக்கும்.

அந்த மரத்தின் மையப் பகுதியில் வந்து நின்றது கனலி.

கனலியை கண்டதும், ஆடலரசு கூட்டிலிருந்து வெளியே வந்தது. கனலியிடம் சென்று அது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டது.

“ஆடலரசு, எல்லோரையும் அழைச்சிட்டு வாப்பா” என்று கனலி சொன்னது.

Continue reading “சொர்க்க வனம் 20 – கனலியின் முயற்சிகள்”

சொர்க்க வனம் 19 – ‍இருன்டினிடே எடுத்த முடிவு

இருன்டினிடே எடுத்த முடிவு

இங்கு

சொர்க்க வனத்தின் தெற்குப் பகுதியில் ஸ்வாலோ குருவிக் கூட்டம் தங்கியிருக்கிறது.

வாக்டெய்லை தொலைத்துவிட்ட துயரத்தில் இருந்து அவை மெல்ல மீண்டு வருகின்றன. ஆம், அவை தங்களை தாங்களே தேற்றிக் கொண்டிருக்கின்றன. அதனால் குருவிகள் ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பியிருகின்றன என்றே சொல்லலாம்.

Continue reading “சொர்க்க வனம் 19 – ‍இருன்டினிடே எடுத்த முடிவு”

சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி

கனலி சொன்ன செய்தி

தனது இருப்பிடத்தில் இருந்து புறப்பட்ட ஆடலரசு, நேராக கனலியின் கூட்டிற்கு சென்றது. அங்கு கனலி தியானத்தில் மூழ்கியிருந்தது. அதனால் எதுவும் பேசாமல் வாசலில் அமைதியாக நின்றது ஆடலரசு.

சில நிமிடங்கள் கடந்தன. கண்களை விழித்துப் பார்த்தது கனலி. வாசலருகில் ஆடலரசு அமைதியாய் நின்று கொண்டிருந்தது.

“உள்ள வா” என்று ஆடலரசுவை அழைத்தது கனலி.

Continue reading “சொர்க்க வனம் 18 – கனலி சொன்ன செய்தி”