இரண்டு பேருந்துகளும் உயிரியல் பூங்காவை வந்தடைந்ததும், வேதிவாசன் நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்கு சென்று விட்டார்.
அதற்கிடையில், சக ஆசிரியர்கள், அனைத்து மாணவர்களையும் ஒழுங்குபடுத்தி வரிசையாக நுழைவு வாயிலின் முன் நிற்க வைத்திருந்தனர்.
முன்னதாக வருகை பதிவும் கவனமாக எடுக்கப்பட்டிருந்தது. நுழைவுச் சீட்டுகளை வாங்கிய உடன், மாணவர்களை, ஆசிரியர்கள் வரிசையாக உள்ளே அழைத்துச் சென்றனர்.