நீரின் வயது – நீருடன் ஓர் உரையாடல் 33

கார்பன் அணுவின் ஐசோடோப்பான கார்பன்-14ஐ பயன்படுத்தி பழங்கால படிமங்களின் வயதினை கண்டறியும் கதிரியக்கக் கார்பன் காலக்கணிப்பு முறை பற்றிய தகவல்களை வாசித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது எனக்கு தாகம் எடுத்தது. மேசையில் இருந்த நீர் பாட்டிலை எடுத்து, அதிலிருந்த நீரை குடித்தேன்.

மீண்டும் வசிப்பை கவனமுடன் தொடர்ந்தேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு…

“எவ்வளவு நேரமா கூப்பிடறது சார்?” என்ற குரல் ஒலி கேட்டது.

Continue reading “நீரின் வயது – நீருடன் ஓர் உரையாடல் 33”

நீர் ஆக்கம் – நீருடன் ஓர் உரையாடல் – 32

நீர் ஆக்கம்

ஆய்வகத்தில் மும்முரமாக பணி செய்துக் கொண்டிருந்தேன். இரும்பு ஆக்சைடு நானோ துகள்களை தயாரிப்பது தான் அந்த பணி. இரும்பு ஆக்சைடு தயாரிப்புக்கு தேவையான அனைத்து வினைபடு பொருட்களையும் ஆய்வுக் குடுவையில் சேர்த்துவிட்டேன்.

இனி, நான்கு மணி நேரத்திற்கு பின்பு தான் வினையை முடித்து, அதிலிருந்து வினைவிளை பொருளை பிரித்தெடுக்க வேண்டும்.

அதற்கிடையில் வேதிவினையை நிகழ்த்தும் மேடையை சுத்தம் செய்துவிட்டு அருகில் இருந்த குழாயில் கைகளை சோப்பு போட்டு கழுவிக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்தேன்.

Continue reading “நீர் ஆக்கம் – நீருடன் ஓர் உரையாடல் – 32”

மறை நீர்- ‍நீருடன் ஓர் உரையாடல் – 31

மறை நீர்

நீண்ட காலத்திற்கு பின், நண்பன் அலைபேசியின் மூலம் என்னை அழைத்தான். நலம் விசாரிப்பு, தற்போதைய நிலை, பழைய நினைவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பேசிக் கொண்டிருந்தோம்.

எங்களது உரையாடல் முடிந்தது. அலைபேசியை அணைத்து மேசையில் வைத்தேன்.

ஒருமுறை கிராமத்தில் இருந்த எனது நண்பனது வீட்டிற்கு சென்றதும், அங்கு இருந்த தோட்டம், சாகுபடி நிலங்களைக் கண்டு மகிழ்ந்ததும் என் கண் முன்னே வந்து சென்றது.

நீர்ப் பாசனம் மற்றும் நெல் வகைகள் பற்றிய தகவல்களை நண்பனின் அப்பா எனக்கு விரிவாக எடுத்துச் சொன்னதும் எனது நினைவிற்கு வந்தது.

Continue reading “மறை நீர்- ‍நீருடன் ஓர் உரையாடல் – 31”

வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30

வேற்றுலக நீர்

இரவு பத்து மணி இருக்கும்.

பெருமளவில் செயற்கை மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்த நிலையில், முழுநிலவின் ஒளி எங்கும் பரவியிருந்தது.

மேகக் கூட்டங்கள் இல்லை. இயந்திர சத்தம் எதுவும் இல்லை. பறந்து கொண்டிருந்த பறவைகளின் ஒலியினை அவ்வப்பொழுது கேட்க முடிந்தது.

இரவு வானத்தைக் கண்டு மகிழ்ந்தவாறே, மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தேன். சட்டென எனது கவனம் அந்த மண் சட்டியில் சென்றது.

ஆம். கோடை காலங்களில் பறவைகளுக்காக அகண்ட மண்சட்டியில் நீரும், அதன் அருகில் தானியங்களும் வைப்பது வழக்கம்.

Continue reading “வேற்றுலக நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 30”

நீர் வாழிடம் – நீருடன் ஓர் உரையாடல் – 29

கடந்த இரண்டு நாட்களாகவே, அவ்வப்பொழுது பெருமழை கொட்டிக் கொண்டிருந்தது.

அன்று மழை சற்றே ஓய்ந்த நிலையில் நான் வெளியே வந்தேன்; வானத்தைப் பார்த்தேன். கார்மேகக் கூட்டங்கள் இன்னமும் அகலவில்லை. தெருவீதியை பார்த்தேன்; மழைநீர் தேங்கியிருந்தது.

வீட்டின் மதில் சுவரில் பல நத்தைகள் ஏறி ஒட்டிக் கொண்டிருந்தன. உடனே தேங்கிக் கொண்டிருந்த, மழை நீரை பார்த்தேன்.

Continue reading “நீர் வாழிடம் – நீருடன் ஓர் உரையாடல் – 29”