குளிர்விப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 28

குளிர்விப்பான்

சாதமும் சாம்பாரும் சமைத்துவிட்டேன். கூட, ‘முட்டை வறுவல்’ செய்யலாம் என்று தோன்றியது.

உடனே இரண்டு முட்டைகளை எடுத்து கடாயில் இட்டு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தினேன்.

சில நிமிடங்களில் முட்டை ஓட்டில் விரிசல்களை காண முடிந்தது. முட்டைகள் வெந்து விட்டன.

அடுப்பை அணைத்துவிட்டு, கடாயில் இருந்த அவிந்த முட்டைகளை எடுக்க முயன்றேன். அதிக வெப்பத்தை உணர்ந்தேன்.

Continue reading “குளிர்விப்பான் – நீருடன் ஓர் உரையாடல் 28”

நீர் சுழற்சி – நீருடன் ஓர் உரையாடல் – 27

நீர் சுழற்சி

“டிக்.. டிக்.. டிக்..” என சுவர் கடிகாரத்தில் இருந்து வந்து கொண்டிருந்த ஒலியை கவனித்தேன்.

கடிகாரத்தைப் பார்த்தேன். நேரத்தை சரியாக காண முடியவில்லை. காரணம் வெளிச்சம் இல்லை.

மின்விளக்கிற்கான பொத்தானை அழுத்தினேன். மின்விளக்கு பளிச்சிட்டது. கடிகாரத்தில், நேரம் 3.20 எனக் காட்டியது.

இது பிற்பகல் நேரம். உடனே, சன்னல் கதவுகளை திறந்து பார்த்தேன். இருட்டாக இருந்தது. சன்னல் வழியே வானத்தை பார்த்தேன்.

கார்மேகம் சூழ்ந்திருந்து. குளிர்ச்சியும் இருட்டும் சேர்ந்திருந்த அந்த பிற்பகல் வேளை எனக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும்.

Continue reading “நீர் சுழற்சி – நீருடன் ஓர் உரையாடல் – 27”

நீரின் நிறம் – ‍நீருடன் ஓர் உரையாடல் 26

நீரின் நிறம்

மாடியில் இருக்கும் நீர்த் தொட்டியை சுத்தம் செய்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். குளியலறையில் இருக்கும் குழாயை திறக்க, கருமை நிறத்தில் நீர் பீறிட்டு வந்தது.

நீர்த் தொட்டியில் இருந்த மாசுக்கள் எல்லாம் குழாய் வழியாக வெளியேறும்படி குழாயை திறந்தே வைத்தேன்.

சில நிமிடங்களுக்கு பிறகு குழாயின் வழியே ஊற்றிய நீரின் கருமைத் தன்மை குறைந்து கொண்டே வந்தது. அதன் பின்னர், நீர் சுத்தமாக இருந்தது.

நீரில் மாசுத் துகள்கள் இல்லாததை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன்.

Continue reading “நீரின் நிறம் – ‍நீருடன் ஓர் உரையாடல் 26”

நிலத்தடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 25

நிலத்தடி நீர்

‘மக்கும் குப்பைகளை, வீட்டுத் தோட்ட மண்ணில் புதைத்து வைத்தால், மண் வளம் கூடுமே. அந்த செழிப்பான மண்ணை பயன்படுத்த, செடிகள் நன்றாக வளருமே’ என்ற எண்ணம் வெகுநாட்களாக என் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

இன்று இந்த வேலையை செய்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.

வீட்டின் பின்புறத்தில் இருந்த தோட்டத்திற்குச் சென்றேன். மண்வெட்டியை பயன்படுத்தி ஒரு சிறிய பள்ளத்தை உண்டாக்கினேன்.

இன்னும் ஆழத்தை அதிகப்படுத்தலாம் என்று தோன்றியது. அதன்படி, பள்ளத்தின் ஆழத்தை மேலும் அதிமாக்கினேன்.

Continue reading “நிலத்தடி நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 25”

நீர்க்கடிகாரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் ‍- 24

நீர்க்கடிகாரம்

மேசையில் சில காகித லோட்டாக்கள், அளவுகோல், அழியாத‌ மை உடைய‌ எழுதுகோல் மற்றும் ஒரு கிண்ணத்தில் நீர் முதலியனவற்றை கொண்டு வந்து வைத்தேன்.

(லோட்டா என்றால் குவளை அல்லது டம்ளர் என்று அர்த்தம்.)

ஒரு காகித லோட்டாவை எடுத்து அதில் அளவீடுகளை வரையத் துவங்கினேன்.

யாரோ என்னை அழைப்பது போன்று தோன்றியது; கவனம் சிதறியது; சுற்றும் முற்றும் பார்த்தேன்.

“எங்க சார் பாக்குறீங்க? நான் தான் நீர் பேசுறேன். தெரியலையா?” என்று உரக்க பேசியது நீர்.

அப்பொழுது தான் உணர்ந்தேன்.

Continue reading “நீர்க்கடிகாரம் ‍- நீருடன் ஓர் உரையாடல் ‍- 24”