எனது அறையில் இருந்த புத்தக அலமாரிகளை சீர்படுத்திக் கொண்டிருந்தேன். அலமாரியின் மேல் அடுக்கில் இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை கீழே இறக்கிவைத்தேன்.
பெட்டிகளின் மீது தூசியும் ஒட்டடையும் பயங்கரமாக இருந்தன. அவற்றை எல்லாம் சுத்தமாக துடைத்து தூய்மையாக்கினேன். பின்னர் ஒவ்வொரு பெட்டியாக திறந்து, அதில் இருந்தவற்றை வெளியே எடுத்து வைத்தேன்.
பெரும்பாலும் அவை பழைய நோட்டு புத்தகங்களும், எழுதப்பட்ட தாள்களும் தான். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு கல்லூரி வகுப்புகள் நடந்தபொழுது, நான் எடுத்த பாடக் குறிப்புகளும் கட்டுகட்டாக இருந்தன.
Continue reading “கன நீர்- நீருடன் ஓர் உரையாடல் 23”