கன நீர்- நீருடன் ஓர் உரையாடல் 23

கன நீர்

எனது அறையில் இருந்த புத்தக அலமாரிகளை சீர்படுத்திக் கொண்டிருந்தேன். அலமாரியின் மேல் அடுக்கில் இரண்டு பெரிய அட்டைப் பெட்டிகள் இருந்தன. அவற்றை கீழே இறக்கிவைத்தேன்.

பெட்டிகளின் மீது தூசியும் ஒட்டடையும் பயங்கரமாக இருந்தன. அவற்றை எல்லாம் சுத்தமாக துடைத்து தூய்மையாக்கினேன். பின்னர் ஒவ்வொரு பெட்டியாக திறந்து, அதில் இருந்தவற்றை வெளியே எடுத்து வைத்தேன்.

பெரும்பாலும் அவை பழைய நோட்டு புத்தகங்களும், எழுதப்பட்ட தாள்களும் தான். சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு கல்லூரி வகுப்புகள் நடந்தபொழுது, நான் எடுத்த பாடக் குறிப்புகளும் கட்டுகட்டாக இருந்தன.

Continue reading “கன நீர்- நீருடன் ஓர் உரையாடல் 23”

நீர் ஏற்றம் – நீருடன் ஓர் உரையாடல் – 22

நீர் ஏற்றம்

நண்பர் ஒருவர், நுண்புழை ஏற்றம் (capillary action) என்ற அறிவியல் தத்துவத்தை விளக்கும் ஒரு எளிய செய்முறை விளக்கத்தை நிகழ்த்தி, அதனை காணொளியாக எடுத்து அனுப்பும்படி கேட்டிருந்தார்.

அதற்காகத்தான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு யோசனை கிடைத்தது. அதன்படி, ஒரு கண்ணாடி லோட்டாவில் பாதியளவு நீர் எடுத்துக் கொண்டேன். ஒரு மெல்லிழைக் காகித்தை (tissue paper) இரண்டாக செங்குத்தாக வெட்டினேன்.

ஒரு காகித துண்டினை எடுத்து, அதன் முனை மட்டும் கண்ணாடி லோட்டாவில் இருக்கும் நீரின் மேற்பரப்பை தொடும்படி பிடித்தேன். உடனே, நீர் அந்த மெல்லிழைக் காகித துண்டு வழியே மேலே ஏறியது.

Continue reading “நீர் ஏற்றம் – நீருடன் ஓர் உரையாடல் – 22”

மீக்குளிர் நீர்- நீருடன் ஓர் உரையாடல் – 21

மீக்குளிர் நீர்

‘இன்று மாடி மற்றும் படிகட்டுகள் அனைத்தையும் சுத்தம் செய்துவிட வேண்டும்’ என்று முடிவு செய்தேன். வேறு சில வேலைகளின் நிமித்தம், தூய்மை பணியை தொடங்குவதில் சற்று தாமதம் ஆயிற்று.

அப்பொழுது மணி, கிட்டத்தட்ட பகல் 12.30 இருக்கும்.

“வெயில்லையா மொட்ட மாடிய கழுவ போற?” என்று அப்பா கேட்டார்.

Continue reading “மீக்குளிர் நீர்- நீருடன் ஓர் உரையாடல் – 21”

பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20

பொதுக் கரைப்பான்- நீருடன் ஓர் உரையாடல்- 20

சில எலுமிச்சை பழங்கள் இருந்தன. அவற்றுள் இரண்டு மிகவும் பழுத்திருந்தன. ஆங்காங்கே பழுப்பு நிறத்தில் புள்ளிகளும் இருந்தன. அப்படியே வைத்திருந்தால், அவை அழுகிவிடும்.

“என்ன செய்யலாம், எலுமிச்சை சாதம் செய்யலாமா?” என்று யோசித்தேன். ஆனால், காலையில் சமைத்திருந்த சாம்பார் அதிகமாகவே இருக்கிறது. ‘சாம்பார் வீணாயிடுமே?’ என்றும் தோன்றியது.

‘சரி சாறு போட்டிடலாம்’ என்று முடிவு செய்தேன்.

Continue reading “பொதுக் கரைப்பான் – நீருடன் ஓர் உரையாடல்- 20”

நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19

நீரின் ஒட்டுந்தன்மை - நீருடன் ஓர் உரையாடல் - 19

அதிகாலை பொழுது. சுமார் ஆறு மணி இருக்கும். மாடிக்கு வந்தேன்.

காலநிலை குளிர்ச்சியாக இருந்தது. சூரியக் கதிர்கள் இன்னமும் பூமியை வந்தடையவில்லை. ஆனால் வெளிச்சம் இருந்தது.

அங்கிருந்த பூச்செடிகளை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தேன். செடியின் இலைகளில் நீர்த்திவலைகள் ஆங்காங்கே இருந்தன. அவற்றை உற்றுப் பார்த்தேன்.

ஒரு இலையின் முனையில் கோள வடிவில் நீர் துளி ஒன்று ஒட்டியபடி, புவி ஈர்ப்புவிசையை எதிர்த்து கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தது. இயற்கையின் இந்த நுட்பமான அறிவியலை எண்ணி வியந்தேன்.

அப்பொழுது நீருடன் பேச விரும்பினேன். பேச்சை நாமே தொடங்குவோமே என்று தேன்றியது.

உடனே “பாத்து… பத்திரம்… இலையில இருந்து கீழ விழுந்திடப் போற‌” என்று அந்த நீர்த்திவலையைப் பார்த்துக் கூறினேன்.

Continue reading “நீரின் ஒட்டுந்தன்மை – நீருடன் ஓர் உரையாடல் – 19”