தேர்தல் பணி பற்றித் தெரிந்து கொள்வோம்

தெரிந்து கொள்வோம் தேர்தல் பணியை

தேர்தல் பணி ஒரு சவாலான பணி. சில அடிப்படைப் பிரச்சினைகளைக் கவனித்துக் கொண்டால் தேர்தல் பணியை எளிதாக்கலாம். கட்டுரை அவற்றை விளக்குகிறது.

அன்பார்ந்த இனிது மின்னிதழ் வாசகர்களுக்கு வணக்கம்.

தேர்தலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்பது மக்களாட்சி முறையில் மிக முக்கியமான பொறுப்பு. நமது அரசு ஊழியர்கள் மிகச் சிறப்பாகத் தேர்தலை நடத்தி வருகின்றார்கள். அவர்களுக்கு மக்களின் சார்பாக வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கட்டுரையில் ஓர் ஆசிரியராகவும், வாசகனாகவும், என் கருத்துக்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகளோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

Continue reading “தேர்தல் பணி பற்றித் தெரிந்து கொள்வோம்”

கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 2

கவிப்பேரரசு வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து நமக்குக் காலம் தந்த பரிசு. அவரைப் பற்றிய இரண்டு கட்டுரைகளில் இது இரண்டாவது கட்டுரை.

முதல் கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.

மனித வாழ்க்கை என்பது விசித்திரமானது; அதேசமயம் நிலையில்லாதது. நிலையில்லாத வாழ்க்கையில் நாம் இந்த சமுதாயத்துக்கு நிலையான ஒன்றை விட்டுச் செல்ல வேண்டும் என்ற கருத்தை, நமக்கு பல அறிஞர்களும் கவிஞர்களும் மேதைகளும் ஞானிகளும் கூறிச் சென்றுள்ளார்கள்.

ஒரு சாதாரண மனிதன் கல்வி, அறிவு இல்லாதவன்கூட இசையின் மூலம் அறிந்து கொள்ள பாடல் எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து.

‘இளமை உன் தோளில்

இருக்கும் போதே

எது நிச்சயம்’ என்பதை சுட்டிவிடு என்று கவிதையில் கூறியவர்.

Continue reading “கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 2”

கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 1

வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் திரைப்படப் பாடல்களுக்குத் தேசிய விருது என்று உச்சத்தில் நிறுத்தியவர்.

மனித வாழ்க்கையின் குறியீடுகள் என்றால் நிலம், மொழி, பண்பாடு, பராம்பரியம் என்று கூறலாம்.

மாற்றம் என்பது காலத்தின் கையிலிருந்து மனிதர் வாழ்க்கையில் குழைந்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தமிழ்த்திரை இசையில் பாடல் எழுத எத்தனையோ பேர் வந்தார்கள்; சென்றார்கள்; முத்திரை பதித்தவர் சிலர்.

Continue reading “கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 1”

கவிஞர் வாலி

கவிஞர் வாலி

காவிரிக் கரையில் பிறந்த காவியக் கவிஞர் வாலி பற்றி நாம் இந்த வாரம் காண்போம். கவிஞர் வாலி ஓவிய வாலியாய் தான் முதலில் வலம் வந்தார். பின்பு காவிய வாலியாய் அவதாரம் எடுத்தார்.

தமிழ் சினிமாவில் 1958-ல் முதன் முதலில் தெலுங்கு இசையமைப்பாளரான கோபாலம் என்பவரின் இசையில், மைசூர் இராஜ பரம்பரையைச் சார்ந்த ஏகாம்பர ராசன் என்பவரின் தயாரிப்பில் உருவான, ‘அழகர்மலைக் கள்வன்‘ என்ற தமிழ் திரைப்படத்தில் திரைப்படப் பாடலாசிரியராக வாலி அறிமுகமானார்.

Continue reading “கவிஞர் வாலி”