பழி தீர்ப்பு – சிறுகதை

ஆற்காடு சாலையின் வழியே குன்றத்தூரிலிருந்து வடபழனி வரை செல்லும் M88 பேருந்து பாய்க்கடை பேருந்து நிறுத்தத்தில் வந்து நின்றது. ஸ்ருதி அதே பேருந்தில் கடைசி சீட்டில் அமர்ந்து யாரோ ஒருவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

வடபழனி செல்வதற்காக முன் படிக்கட்டுகளின் வழியே ஏறிய சுரேஷின் பார்வையில் காலி இருக்கை ஒன்று தென்பட இருக்கை கிடைத்த சந்தோஷத்தில் பயணச்சீட்டை வாங்காமலே வேகமாக சென்று இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.

அந்த தடத்தில் ஓடும் பேருந்துகளில் எப்பொழுதுமே கூட்டம் நிரம்பி வழியும். மாறாக அன்று அந்த பேருந்தில் நெரிசல் அதிகம் இல்லாதிருந்தது.

சென்னை நகரப் பேருந்துகளின் நடத்துனர்கள் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர்.

Continue reading “பழி தீர்ப்பு – சிறுகதை”

யாருக்காகவும் எதற்காகவும் – சிறுகதை

யாருக்காகவும் எதற்காகவும்

அவன் பேரு சுப்பையா. ஊரில் அவனை ‘தொப்பையன்’ என்றுதான் அழைப்பார்கள். ஊரில் யார் மனதும் புண்படு்ம்படி அவன் பேசியது கிடையாது.

பேசியது கிடையாது என்பதைவிட பேச தெரியாது என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருக்கும். கள்ளம், கபடம், சூது, வாது என்று எந்த எண்ணமும் இல்லாதவன். வெகுளி. அன்பு என்ற வார்த்தையின் அடையாளம்.

குழந்தைகள் என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம். அடுத்தவர் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாய் நினைப்பதாலோ என்னவோ அவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லை.

Continue reading “யாருக்காகவும் எதற்காகவும் – சிறுகதை”

மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை

மைக்கேல் தாத்தா

மாதத்திற்கு ஒருமுறை முகச்சவரம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தேன். எத்தனை வயதிலிருந்து சவரம் செய்துகொள்ள ஆரம்பித்தேன் என்பது நினைவில் இருந்தால், இதுவரை எத்தனை சவரம் செய்துள்ளேன் என்பதை சுலபமாக சொல்லி விடலாம்.

அதே போல்தான் மூன்று மாதத்திற்கு ஒருமுறை தலை முடியை வெட்டிக்கொள்ளும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தேன். அக்குளுக்குள் சவரம் செய்து ஆறு மாதத்திற்கு மேல இருக்கும்.

அக்குளுக்குள் வேர்த்து வேர்த்து சடை பிடித்துப் போய் ஊரையே அழைத்து முடி எடுப்பு விழா எடுக்கலாம் அந்த அளவிற்கு வளர்ந்து கிட‌ந்தது.

Continue reading “மிலிட்டரி தாத்தா மைக்கேல்- சிறுகதை”

பாகப்பிரிவினை – ‍சிறுகதை

பாகப்பிரிவினை

“அண்ணே! மேல கெடக்கியா? கீழ கெடக்கியா?” என்று கும்மிருட்டுக்குள் கையில் வீச்ச அரிவாளை வைத்து கொண்டு கேட்டான் வேத முத்து.

அடுத்த நொடியே “கீழ கெடக்கேன் தம்பி” என்று ஈன முத்துவிடம் இருந்து பதில் வந்தது.

அடுத்த நொடியே கையில் இருந்த வீச்ச அரிவாளை இறுகப் பற்றிக் கொண்டு ஓங்கி வெட்டினான் வேத முத்து.

அதற்கடுத்த நொடியில் ‘ஆ’ வென அலறினான் ஈன முத்து.

“அண்ணே! என்ன ஆச்சி?” என்றான் வேத முத்து.

உயிருக்கு போராடிய நிலையில் “என்னைய வெட்டிட்டயடா தம்பி” என்றான் ஈன முத்து.

ஈன முத்து சொன்னதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான் வேத முத்து.

Continue reading “பாகப்பிரிவினை – ‍சிறுகதை”

மனம் கொத்திகள் – சிறுகதை

இண்டிகோ கார் ஒன்று தெருவில் வந்து நின்றது.

அதிலிருந்து குமரன் மணக்கோலத்தில் இறங்கி நின்றான். அவனை தொடர்ந்து இஷாவும் மணக்கோலத்தில் இறங்கினாள்.

அவர்களைப் பார்த்த அந்த தெருவுக்காரப் பெண் முப்பிடாதி, சங்கரனின் வீட்டுக்குள் ஓடினாள்.

தெருவில் நடப்பது எதுவும் தெரியாமல் வீட்டில் அமைதியாக  சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சங்கரன்.

முப்பிடாதி வேகமாக வருவதை பார்த்தவர் “முப்பிடாதி, என்ன அரக்க பறக்க ஓடி வர்ற? என்ன விஷயம்?”

Continue reading “மனம் கொத்திகள் – சிறுகதை”