பசி – ‍சிறுகதை

பசி - சிறுகதை

“எலே நாராயணா, நேத்து ஆட்ட மேய்ச்சலுக்கு எங்கல ஓட்டிட்டு போயிருந்த?” என்று கேட்டவாறு புஞ்சை பயிர்களுக்கு நடுவே வரப்பில் நடந்து வந்து நின்றார் சுப்பராயலு பண்ணையார்.

மேய்ச்சல் காடும் வயல் காடும் சேரும் இடத்தில் நின்று கொண்டு, பயிர்க‌ளுக்குள் ஆடுகளை வரவிடாமல் தடுத்தவாறு நின்று கொண்டிருந்த நாராயணன் சத்தம் கேட்டு, தோளில் கிடந்த துண்டை அவசர அவசரமாக எடுத்து கையில் வைத்துக்கொண்டு வணங்கியவாறு,

“சாமி, நேத்து கீழ காட்டுக்கு ஓட்டிட்டு போயிருந்தேனுங்க.”

“பொய் சொல்லாதல.”

“நெசமாதான், சொல்றேன் சாமி.”

Continue reading “பசி – ‍சிறுகதை”

மெலியார்மேல் செல்லும் இடத்து ‍- சிறுகதை

அருள் உடைமை

சினிமா இயக்குநர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவருடைய கதைக்கு நான் திரைக்கதை மற்றும் வசனம் எழுதிக் கொடுத்திருந்தேன். அதை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தேடி வந்தார்.

அப்போது நான் ரவி என்கிற இயக்குநரின் படத்தில் துணை இயக்குநராக வேலை செய்து வந்தேன். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருந்தது.

Continue reading “மெலியார்மேல் செல்லும் இடத்து ‍- சிறுகதை”

கெடுவான் – சிறுகதை

கெடுவான்

திருநெல்வேலியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் செங்குளம் கிராமத்தின் சந்திப்பு இருக்கிறது. சுமார் ஐநூறு குடும்பங்களை உள்ளடக்கிய கிராமம்.

சந்திப்பிற்கும் ஊருக்கும்மான இடைவெளி ஒரு மைல் தொலைவு இருக்கும். அந்த ஒரு மைல் தொலைவு சாலையின் குறுக்காக கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி செல்லும் இரயில்வே இருப்புப் பாதை ஒன்று சென்றது.

உச்சி வெயில் அனலாய் காய்ந்துக் கொண்டிருந்தது. சாலையெங்கிலும் கானல் நீர் காட்சி தந்து கொண்டிருந்தது.

Continue reading “கெடுவான் – சிறுகதை”