கன்சிராம் – எளிய மக்களின் அரசியல் ஆசான்

கன்சிராம்

கன்சிராம் எளிய மக்களின் அரசியல் ஆசான் ஆவார். இந்தியாவில் அடித்தட்டு மக்களும் அதிகாரத்தில் பங்கேற்பதற்கு வழிவகை செய்தவர் அவர்.

அரசியல்வாதி, பௌத்த அறிஞர், சமூக செயற்பாட்டாளர், சாதியை முற்றும் முழுவதுமாக அழித்தொழிக்க எண்ணிய மாமனிதர், அம்பேத்கரின் சிந்தனையாளர், வகுப்புவாத சக்திகளை எதிர்த்து களமாடிய களப்போராளி, பகுஜன் சமாஜ் கட்சியை தோற்றுவித்தவர், தேசியத் தலைவர், பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர் இப்படி அவரின் பெருமையை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

ஆனாலும் சிறந்த மனிதன் என்பதைத் தவிர வேறு எந்த பட்டமும் அவரை அலங்கரிக்காது.

Continue reading “கன்சிராம் – எளிய மக்களின் அரசியல் ஆசான்”

பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்

செல்லம்மாள் பாரதி

பாரதியை இச்சமூகம் ஒரு மாபெரும் புரட்சியாளனாகக் கொண்டாடி மகிழ்கிறது.

இன்று பல்வேறு அரங்குகளிலும் பாரதியை கொண்டாடுகின்ற அளவிற்கு அவரது மனைவி செல்லம்மாள் நினைவு கூறப்படவில்லை.

அவனோடு இருபத்து ஐந்து ஆண்டுகள் வெறுமை நிறைந்த வறுமை வாழ்க்கை வாழ்ந்த அந்த செல்லம்மாள் தியாக தீபமாய் ஒளிர்கிறாள்.

Continue reading “பாரதி என்றதும் நினைவில் எரிகிறாள் செல்லம்மாள்”

கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 1

வைரமுத்து

கவிப்பேரரசு வைரமுத்து தமிழ் திரைப்படப் பாடல்களுக்குத் தேசிய விருது என்று உச்சத்தில் நிறுத்தியவர்.

மனித வாழ்க்கையின் குறியீடுகள் என்றால் நிலம், மொழி, பண்பாடு, பராம்பரியம் என்று கூறலாம்.

மாற்றம் என்பது காலத்தின் கையிலிருந்து மனிதர் வாழ்க்கையில் குழைந்து புதிய பரிணாமத்தை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தமிழ்த்திரை இசையில் பாடல் எழுத எத்தனையோ பேர் வந்தார்கள்; சென்றார்கள்; முத்திரை பதித்தவர் சிலர்.

Continue reading “கவிப்பேரரசு வைரமுத்து – காலம் தந்த பரிசு – பகுதி 1”

கவிஞர் வாலி

கவிஞர் வாலி

காவிரிக் கரையில் பிறந்த காவியக் கவிஞர் வாலி பற்றி நாம் இந்த வாரம் காண்போம். கவிஞர் வாலி ஓவிய வாலியாய் தான் முதலில் வலம் வந்தார். பின்பு காவிய வாலியாய் அவதாரம் எடுத்தார்.

தமிழ் சினிமாவில் 1958-ல் முதன் முதலில் தெலுங்கு இசையமைப்பாளரான கோபாலம் என்பவரின் இசையில், மைசூர் இராஜ பரம்பரையைச் சார்ந்த ஏகாம்பர ராசன் என்பவரின் தயாரிப்பில் உருவான, ‘அழகர்மலைக் கள்வன்‘ என்ற தமிழ் திரைப்படத்தில் திரைப்படப் பாடலாசிரியராக வாலி அறிமுகமானார்.

Continue reading “கவிஞர் வாலி”

எழுத்தாளர் சுஜாதா – ஓர் அறிமுகம்

எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா  புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். 

அவர் ஒரு பொறியியல் வல்லுநர். அறிவியலைத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறச் செய்தது அவரின் முக்கியமான பங்களிப்பாகும்.

அவரின் எழுத்துக்கள் அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உள்ளன.

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இயற்பெயர் ரங்கராஜன்வர் தன் மனைவியின் பெயரான சுஜாதாஎன்னும் புனைப்பெயரில் தன் படைப்புகளை எழுதி வந்தார்.

நாம் இக்கட்டுரையில் சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய படைப்புகளுள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம். Continue reading “எழுத்தாளர் சுஜாதா – ஓர் அறிமுகம்”