வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
இணைய இதழ்
வானத்திலே திருவிழா
வழக்கமான ஒருவிழா
இடிஇடிக்கும் மேகங்கள்
இறங்கி வரும் தாளங்கள்
கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து என்ற பாடல் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் அருளிய கோதை மொழி என போற்றப்படும் திருப்பாவையின் ஏழாவது பாசுரம் ஆகும்.
பாவை நோன்பிற்காக இளம் பெண்கள் கூட்டமாகச் சென்று நீராடிவிட்டு இறைவனின் புகழினைப் பாடி வழிபாடு மேற்கொள்வர்.
அவ்வாறு நீராட செல்லும்போது, தங்களின் கூட்டத்தின் தலைவியான பெண் உறங்கிக் கொண்டிருப்பதாகவும், அப்பெண்ணை எழுப்புவதாகவும் அமைந்த பாசுரம்.
Continue reading “கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து”
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில் என்ற பாடல், பெண் ஆழ்வாரான ஆண்டாள் அருளிய, கொஞ்சும் தமிழ் என போற்றப்படும் திருப்பாவையின் ஆறாவது பாசுரம் ஆகும்.
உறக்கத்தில் இருக்கும் பெண், திருமாலின் பெருமைகளைக் கேட்டு, குளிர்ந்த உள்ளத்துடன் எழுவதற்காக பாடப்படும் பாசுரம் இது.
பாம்பணையில் பள்ளி கொண்டு, முனிவர்களாலும் யோகிகளாலும் போற்றப்படும், அரி எனப்படும் திருமாலின் பெயரினைக் கேட்டு உள்ளம் குளிர, பாவையை அழைக்கும் பைந்தமிழ் பாசுரம்.
Continue reading “புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்”
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை என்ற பாடல் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாள் அருளிய கோதைத் தமிழ் எனப் போற்றப்படும் திருப்பாவையின் ஐந்தாவது பாசுரம் ஆகும்.
உலகினைக் காக்கும் கடவுளான திருமாலின் திருப்பெயர்களைக் கூறிக் கொண்டிருந்தால் நம்முடைய பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல பொசுங்கி விடும் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல் என்ற பாடல் அரங்கனிடம் மாறாத பக்தி கொண்ட ஆண்டாள் அருளிய திருப்பாவையின் நான்காவது பாசுரம் ஆகும்.
மழையானது எப்படி பொழிகிறது என்பதை எடுத்துரைக்கும் பாடல் இது. மழை பெய்யும் நிகழ்வுகளை இறைவனோடு ஒப்பிட்டுக் கூறும் ஒப்பற்ற பாசுரம்.
1200 ஆண்டுகளுக்கு முந்திய, இந்த ஆன்மிகப் பாடலில் இருக்கும் அறிவியலையும் நாம் வியக்கலாம்.