விவசாயம் அன்றும் இன்றும்

விவசாயம் அன்றும் இன்றும் என்பது நம்மை யோசிக்க வைக்கும் ஓர் அருமையான கட்டுரை.

ஒரு ஆண்டை ஆறு பருவங்களாகப் பிரித்து

1.இளவேனில்

2.முதுவேனில்

3.கார்காலம்

4.குளிர் காலம்

5.முன்பனிக்காலம்

6.பின்பனிக்காலம் என இயற்கை நமக்களித்துள்ளது.

Continue reading “விவசாயம் அன்றும் இன்றும்”

உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்

உழவு மாடுகள்

உழவு மாடுகள் விவசாயிகளின் செல்வம் ஆகும். மாடு என்றால் பொதுவில் செல்வம் என்று பொருள். கம்பன் மாட்டின் சிறப்பை சொல்லும்போது,

"வானத்தில் மேகங்கள் எழுந்து குறித்த காலத்தில் மழை பெய்தாலும் உலகினருக்கு செழிப்பு உண்டாவது மாடுகளினாலேதான். 

வேதம் படித்தவர்களால் வெய்யப்படும் வேள்விகள் சிறப்புப் பெறுவதுவும் மாடுகளால்தான். 

படைகள் கொண்டு போர் புரியும் மன்னர்களின் மதங்கொண்ட யானைகள் வலிமைப் பெறுவதும் மாடுகளால்தான்" என்று வேளாளர்களின் உழவு மாடுகளைச் சிறப்பிக்கின்றார்.
Continue reading “உழவு மாடுகள்- வகைகளும் சுழிகளும்”

விவசாயி எதை இழந்தான்?

உரிமையை இழந்த விவசாயி

விவசாயி எப்படி இருந்தான்; ஏன் இன்று இழிநிலை அடைந்தான்? என்பதைச் சுருக்கமாகச் சொல்லும் கட்டுரை. படித்துப் பாருங்கள்; படித்ததை யோசித்துப் பாருங்கள்.

தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடி மன்னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனும்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடையர் ஆனாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. (ஏரெழுபது.கம்பர்)

பாடலின் பொருள்

எல்லோரும் வணங்கும் குலத்தில் பிறந்தால் என்ன?

அரச குலத்தில் குலத்தில் பிறந்தால் என்ன?

வணிகர் அல்லது செல்வர் குலத்தில் பிறந்தால் என்ன?

இவர்களை எல்லாம் விட உழவர்களே மேலானவர்கள்.

ஏனென்றால் அவர்கள்தான் மனிதர்கள் உயிரோடு வாழ உணவு படைக்கின்றார்கள்.

இதுதான் விவசாயியின் அன்றைய நிலை.

இன்று இருப்பதோ அவல நிலை.

Continue reading “விவசாயி எதை இழந்தான்?”

ஏரி ‍- பண்டைய முறையும் அமைப்பும்

ஏரி
ஏரி நீர் சேமிப்பின் முக்கிய அங்கம். நம் முன்னோர்கள் காலத்தில் ஏரிகள் எப்படி இருந்தன என நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. அதற்காகவே இந்தக் கட்டுரை.

மனித நாகரீகம் ஆரம்பித்த காலம் தொட்டு நீர்நிலைகள் மற்றும் வேளாண்மை என்பன இன்றியமையாதவையாக இருந்துள்ளன.

பெரும்பாலும் ஆற்றுப் படுகைகளில் பண்டைய நாகரிகம் பரந்திருக்கக் காண்கின்றோம். மனிதர்கள் முதலில் ஆற்றை மட்டும் சார்ந்து இருந்துள்ளனர். பிறகு நீர்நிலைகள், குட்டைகள், ஏரிகள் உருவாக்கப்பட்டு அதன் வழியே பாசனம் செய்யப்பட்டது. கால்வாய்கள் மூலம் பாசனம் வந்தது, குட்டைகளில் இருந்து ஏற்றம் மூலம் பாசனம் செய்யப்பட்டது.

Continue reading “ஏரி ‍- பண்டைய முறையும் அமைப்பும்”