ஆண் :ஆளக்கொல்லும் ஆலகாலம்
கண்ணில் வச்சவளோ -இந்த
அத்தானையே நெஞ்சுக்குள்ள
அடச்சி தைச்சவளோ !
வருணத்தின் வக்கிரம்!
மலம் கலந்த பின்னும்
சலனமேதுமின்றி
கர்வத்தோடு கர்சித்து நிற்கிறது
நீர்த்தேக்க தொட்டி ஒன்று
நிமிர்ந்தபடியே…
ஆண்டவனப் பாடலன்னா குத்தமில்ல…
ஆண்டவனப் பாடலன்னா
குத்தமில்ல – பெத்த
ஆத்தாளப் பாடலன்னா
எதுக்கு புள்ள?
வேண்டாத சாமி இல்ல
பெத்தெடுக்க – பெரும்
வேள்விகள செஞ்சா அவ
நெஞ்சுக்குள்ள
ஆயிரம்தான் உறவு வரும்
அத்தனையும் ஒதுங்கும்
ஆத்தாளின் அணைப்பினிலே
அன்பு பூத்துக் குலுங்கும்!
மலரட்டும் மார்கழி!
பனி தூவும்
பணி செய்யும்
வெண் மகள்
நன்மார்கழி !
குற்றத்தைக் கூறும் கூத்தனே! – கவிஞர் கவியரசன்
கூடாதோர் இடத்தினில்
கூடித்தான் குழைந்தேனோ
ஆடாத ஆட்டங்கள்
ஆடித்தான் களித்தேனோ
போடாத வேஷங்கள்
போட்டுத்தான் நடித்தேனோ
கேடான கொடுஞ்செயலை
செய்துதான் முடித்தேனோ…