நர்மதா ஒரு நீரோடை – கதை

மாலை மணி நாலே முக்கால். துருப்பிடித்த குழாய்களோடு நைந்துபோன பவானி ஜமுக்காளத்தாலான சிகப்பும் வெள்ளையுமாய் கோடுபோட்ட துணி மாட்டப்பட்டிருந்த ஹைதர்காலத்து ஈஸிசேரில் சாய்ந்து உட்கார்ந்தபடி செகண்ஹேண்டில் பெரும் பிரயத்தனத்தில் வாங்கிய சின்ன சைஸ் டிவியில் நியூஸ்சேனலில் செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்தார் சேதுராமன். “ஏன்னா..நியூஸே பாத்துண்ருக்கேள்.. சங்கரா டிவி மாத்தமாட்டேளா..” “மணி நாலே முக்கால் தானே ஆறுது நர்மதா.. அஞ்சு மணிக்குதானே லலிதா சகஸ்ரநாமம் சங்கரா டிவில..” “இல்ல..இல்ல..நாலு அம்பதாறுக்கே ஆரம்பிச்சுடறுது..மணி நாலு அம்பத்தஞ்சு ஆயிடுத்து பாருங்கோ..” நியூஸ் … நர்மதா ஒரு நீரோடை – கதை-ஐ படிப்பதைத் தொடரவும்.