நம்மை காக்கும் அன்னையவள் பகவதியே
நன்மை தந்து காத்திடுவாள் அருள்நிதியே
நாடிவரும் பக்தருக்கு தரும் வரமே
கோடிவரம் வாழ்முழுதும் அவள் வரவே
இணைய இதழ்
நம்மை காக்கும் அன்னையவள் பகவதியே
நன்மை தந்து காத்திடுவாள் அருள்நிதியே
நாடிவரும் பக்தருக்கு தரும் வரமே
கோடிவரம் வாழ்முழுதும் அவள் வரவே
கூடாதோர் இடத்தினில்
கூடித்தான் குழைந்தேனோ
ஆடாத ஆட்டங்கள்
ஆடித்தான் களித்தேனோ
போடாத வேஷங்கள்
போட்டுத்தான் நடித்தேனோ
கேடான கொடுஞ்செயலை
செய்துதான் முடித்தேனோ…
கல்வியும் சிறந்த ஞானமும் பெருக
கல்வியன் னையை வேண்டுக
ஒரு சமயம் நாரதர் தேவலோகத்துக்குச் சென்றிருந்த போது பாரிஜாத புஷ்பம் ஒன்றை இந்திரனிடமிருந்து பெற்றார். அதை கிருஷ்ணனுக்குக் கொடுக்கலாம் எனத் துவாரகைக்கு கொண்டு வந்தார்.
Continue reading “துளசி பூஜையின் பலன் – ஜானகி எஸ்.ராஜ்”சேர்மக்கனி அவர்கள் பூலாஊரணி என்னும் குக்கிராமத்தில் வாழ்ந்தாலும், பொதுவாழ்வில் தலைமைப் பண்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்து காட்டியவர்.
தன்னுடைய நலனுக்காக இல்லாமல் பிறருடைய நலனுக்காக உழைப்பவர்கள் இருப்பதனாலேதான், இந்த உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்தக் கருத்திற்கு முற்றிலும் பொருத்தமாக, பொது வாழ்வில் மற்றவர்களுக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர், த.சேர்மக்கனி அவர்கள்.
சேர்மக்கனி எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர் அல்ல. அவர் எந்த அரசு பதவியையும் வகித்தவர் அல்ல.
நேரடி அரசியலில் ஈடுபடாமலும் பொது வாழ்வில் ஈடுபடலாம் என எனக்கு வழிகாட்டியவர் அவர்தான்.
அவருடைய வாழ்வும் செய்தியும் சொல்லும் சுருக்கமான கட்டுரை இது.
Continue reading “சேர்மக்கனி – பொது வாழ்வின் இலக்கணம்!”