ராஜாளி வாழ்க்கை சொல்லும்
ரகசியம் நமக்குப் பாடம்!
(மேலும்…)சனிக்கிழமை காலை மணி ஏழு.
பல் தேய்த்துவிட்டு தாவணித் தலைப்பால் முகத்தைத் துடைக்கொண்டு சமையலறைக்கு வந்த மகளிடம் பதமாக ஆற்றிய காபி இருக்கும் டம்ளரை நீட்டிக் கொண்டே, “நல்ல பொண்ணு நீ! ராத்திரி எட்டு மணிக்கே அப்பிடி என்ன தூக்கம்? சாப்புடக்கூட இல்லாம, அதுவும் சுத்தி புத்தகமும் நோட்டுமா கெடக்க, தரேல படுத்துக்கிட்டு!” செல்லமாய்க் கோபித்துக் கொண்டாள்.
(மேலும்…)காமராஜர் இந்தியாவின் கிங் மேக்கர் (Kingmaker of India) என்று அழைக்கப்படுகிறார். அவர் மூன்று ஆண்டுகள் இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பணியாற்றினார். அவர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் இந்திரா காந்தி ஆகிய இருவரை பிரதமர்களாக உருவாக்கினார்.
(மேலும்…)அறிவை விரிவாக்க அரியாசனத்தில் அமர்ந்தவரே
அறியாச் சிறுவருக்கு அற்புதம் செய்தவரே
செறிவாய்க் கல்வியினை நிறைவாய்த் தந்தவரே
அறிவின் ஆதியை அகத்தினில் விதைத்தவரே
(மேலும்…)‘எனக்கு அப்பாவும் இல்லை. அம்மாவும் இல்லை. இரண்டு பேரையும் நான் சிறு வயதிலேயே இழந்து விட்டேன்.
பள்ளிக்கூடம் போனால் அங்கு சோறு கிடைக்கும் என்று பள்ளிக்கூடம் சென்ற நான் இன்று, அமெரிக்காவில் 130 அமெரிக்கர்களை வைத்து வேலை வாங்கும் அளவுக்கு பெரிய தொழிலதிபராக உயர்ந்து இருக்கிறேன்.
கர்மவீரர் காமராஜர் ஆட்சிகாலத்தில் வழங்கப்பட்ட மதிய உணவும் இலவசக் கல்வியும் இல்லாது போயிருந்தால், நான் இன்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அமிஞ்சிப் பாளையத்தில் கோவணம் கட்டிக்கொண்டு ஆடு மாடுதான் மேய்த்துக் கொண்டு இருந்திருப்பேன்’
என்று சொன்ன உயர்திரு S.A. பழனியப்பன் அவர்களை மேற்கோள் காட்டி “கற்பதனால் என்ன பயன்?” எனும் தலைப்பில் 26.11.2022 அன்று விருதுநகர் புத்தகத் திருவிழாவில் சிறப்புரை வழங்கினார் ஐயா சொல்வேந்தர் சுகி சிவம் அவர்கள்.
(மேலும்…)இனிது இதழில் கீழ்க்கண்ட எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை வெளியிட்டு சிறப்பித்துள்ளார்கள்.
இனிது இதழ் ஆரம்பித்த போது முதல் எழுத்தாளராக வருகை தந்து சிறப்பித்தவர் இராசபாளையம் முருகேசன்.
(மேலும்…)காமராஜர் அவர்களை நாம் என்றும் மறக்கக் கூடாது என்று சொல்வது, அவர் இந்தியாவின் பிரதமர்களை உருவாக்குபவராக இருந்தார் என்பதாலா? (மேலும்…)
சட்டைப் பையில் இருந்தது – 100 ரூபா
வங்கிக் கணக்கில் இருந்தது – 125 ரூபா
கதர் வேட்டி – 4
கதர் துண்டு – 4
கதர் சட்டை – 4
காலணி – 2 ஜோடி
கண் கண்ணாடி – 1
பேனா – 1
சமையலுக்கு தேவையான பத்திரங்கள் – 6
பத்து ஆண்டுகள் தமிழக முதல்வராகவும், பல ஆண்டுகள் அகில இந்திய காங்கிரஸ் தலைவரகவும் இருந்து இந்தியாவில் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய பெருந்தலைவர் காமராசர் மறைந்த போது அவரிடம் இருந்த மொத்த இருப்பே இது தான்.
தான் படிக்காவிட்டாலும் நாட்டில் உள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் படிக்க வேண்டி உழைத்தவர் காமராஜர். அந்த படிக்காத மேதையிடம் இருந்து நாம் படிக்க வேண்டிய ஐந்து விசயங்கள். (மேலும்…)
பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது, சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார். (மேலும்…)