மெலியார்மேல் செல்லும் இடத்து ‍- சிறுகதை

அருள் உடைமை

சினிமா இயக்குநர் ஒருவர் எனக்கு நண்பராக இருந்தார். அவர் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவருடைய கதைக்கு நான் திரைக்கதை மற்றும் வசனம் எழுதிக் கொடுத்திருந்தேன். அதை வைத்துக் கொண்டு தயாரிப்பாளரை தேடி வந்தார்.

அப்போது நான் ரவி என்கிற இயக்குநரின் படத்தில் துணை இயக்குநராக வேலை செய்து வந்தேன். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து கொண்டிருந்தது.

Continue reading “மெலியார்மேல் செல்லும் இடத்து ‍- சிறுகதை”

கற்பு – சிறுகதை

கற்பு

சென்ற வாரம் இதே நேரம் மகிழ்ச்சியும் உற்சாகமுமாய் ஹால் முழுவதும் உறவினர்களும் நண்பர்களுமாய் நிறைந்து அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்க, இன்றோ ஒவ்வொருவரும் மன அமைதியைத் தொலைத்துவிட்டு, முகத்தில் இறுக்கம் சூழ, தலையில் கைவைத்தபடி ஆளுக்கொரு மூலையில் அமர்ந்து மௌனத்தில் மூழ்கியிருந்தனர்.

அன்று ஞாயிற்றுக்கிழமை. ஹால் சுவர்க் கடிகாரம் காலை மணி பத்து என்பதைக் காட்டி தனது கடமையைச் செய்து விட்ட திருப்தியுடன் மணி அடிப்பதை நிறுத்திக் கொண்டது.

கிருஷ்ணகுமார் தான் அந்த மயான அமைதியைக் கலைத்தான்.

Continue reading “கற்பு – சிறுகதை”

தேடல் – சிறுகதை

முதுமையில் தனிமை

அவன் அந்த தெருவின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தான். அங்கும் இங்கும் பார்த்தபடி அவன் கண்கள் எதையோ தேடியபடி இருந்தது. காலை நேரம் என்பதால் போவோர் வருவோர் எனத் தெருவில் கூட்டம் அதிகம் இருந்தது.

Continue reading “தேடல் – சிறுகதை”

பெண் போலீஸ் – சிறுகதை

பெண் போலீஸ்

முதலமைச்சர் கோட்டையிலிருந்து பக்கத்து மாவட்டத்திற்கு நலத்திட்ட உதவிகளை வழங்க சாலை மார்க்கமாக பயணம் செய்யப் போகிறார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடக்கின்றது.

ஏராளமான ஆண், பெண் போலீஸ்காரர்களை சாலையின் இருபக்கமும் நிறுத்தி வைத்துள்ளார்கள். அப்படித்தான் பெண் போலீஸ் திலகவதிக்கும் இன்று டியூட்டி.

போக்குவரத்து நிறைந்த ஒரு சாலையில் அவள் காலை 7 மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறாள். முதலமைச்சரின் கான்வாய் தோராயமாக பதினோரு மணி அளவில் கடக்கக் கூடும் என்று சொல்கிறார்கள்.

Continue reading “பெண் போலீஸ் – சிறுகதை”

முள்ளில் ரோஜா – சிறுகதை

முள்ளில் ரோஜா

அந்த பிரபல சோப் கம்பெனி வாசலின் முன் இருந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸிற்காகக் காத்துக் கொண்டிருந்தபோது, வந்து நின்ற பஸ்ஸிலிருந்து இறங்கினான் விக்னேஷ்.

என்னைப் பார்த்ததும், “என்ன ரவி என்னாச்சு? லீவா இன்னிக்கு? வழக்கத்துக்கு மாறா இருக்கு? நீ லீவே போடமாட்டியே?”

“அஃப் கோர்ஸ். மனசு சரியில்லைப்பா” என்று, ஒருவித மனஇறுக்கத்துடன் யந்திரத்தனமாய் நான் பதிலளித்தேன்.

“என்னது மனசு சரியில்லையா? அப்படி என்ன நடந்தது? வா, காபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்.” என என்னை வலுக்கட்டாயமாகக் கம்பெனி கேண்டீனுக்கு அழைத்துச் சென்றான்.

Continue reading “முள்ளில் ரோஜா – சிறுகதை”