கறையில்லா மனம் – சிறுகதை

கறையில்லா மனம்

அன்று மாலை வழக்கம்போல் மங்கலத்தின் கோபக்கனலில் வார்த்தைகள் கொப்பளித்தன.

“எத்தனமுற சொல்ற‌து. அந்த அருள்மணிகூட சேராத சேராதன்னு. இன்னைக்கும் அவன்கூடத்தான் விளையாடிட்டு வரீயா?”

அமைதியாக புத்தகத்தை எடுத்து அமர்ந்தான் ஆதவன்.

“இங்க ஒருத்தி கத்திக்கிட்டு இருக்கேனே, ஒங்க காதுல விழலயா?” என்றாள் கணவனை. Continue reading “கறையில்லா மனம் – சிறுகதை”

வழிகாட்டுதல் ‍- சிறுகதை

வழிகாட்டுதல்

குழந்தைகளுக்கு, எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வழிகாட்டுதல் வேண்டும்.

பெற்றோர்களில் சிலர், சூழ்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள, குழந்தைகளை நேரடியாகப் பழக்குவது இல்லை.

ஒரு சூழ்நிலையில் நடந்து கொள்ளச் சொல்லும்விதம், மற்றொரு சூழ்நிலைக்குப் பொருந்துவது இல்லை.

ஆதலால் எந்த சூழ்நிலையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று , குழந்தைகளுக்கு நன்கு விளக்கிப் புரிய வையுங்கள். Continue reading “வழிகாட்டுதல் ‍- சிறுகதை”

கல்விக் கோயில் – சிறுகதை

கல்விக் கோவில்

அன்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை. ஊரே ஒன்றாகக் கூடியிருந்தது. வேர்விட்டு, விழுதுவிட்டு நின்ற மரத்தின் நிழலில் ஊர் பெரிய மனிதர்களும், மக்களும் சலசலவெனப் பேசிக் கொண்டிருந்தனர்.

ஊர்த்தலைவர் ஆவுடையப்பர் பேச தொடங்கினார்.

“இங்க பாருங்கப்பா, கொஞ்சம் நேரம் எல்லாரும் அமைதியா இருங்க. நம்ம ஊர தத்தெடுத்து பல நன்மைய செய்யிற அமெரிக்காவைச் சேந்த செல்வந்தர் டக்சன் அய்யா, இந்த முற பெரிய தொகையை அனுப்பியிருக்காரு.

அந்த தொகையை வச்சி ஊருக்கு என்ன நன்மைய செஞ்சிக்கலாமுன்னு எல்லோரும் சேந்து முடிவெடுக்கத்தான் கூடியிருக்கோம். ஆளுக்கொரு வசதியச் சொல்லுங்கப்பா.” Continue reading “கல்விக் கோயில் – சிறுகதை”

வாய்விட்டு சிரிங்க – சிறுகதை

வாய்விட்டு சிரிங்க‌

வாய்விட்டு சிரிங்க என்ற கதை நமக்கு ஒரு முக்கியமான வாழ்க்கைச் செய்தியைச் சொல்கிறது.

சிரிப்பதும் சிரிக்க வைப்பதுமாக வாழ்கின்றவர்கள் மகத்தானவர்கள் என்பதே அது.

முன்னொரு காலத்தில் உப்பூர் என்ற ஊரில் மூன்று நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் எப்போதும் தங்களுடைய பேச்சு மற்றும் நடவடிக்கைகளால் பிறரை சிரிக்க வைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

தாங்கள் பிறந்ததே மக்களை சிரிக்க வைக்கத்தான் என்று கருதினர். Continue reading “வாய்விட்டு சிரிங்க – சிறுகதை”

தெய்வீக இசை – சிறுகதை

தெய்வீக இசை

தெய்வீக இசை என்பது மாமன்னர் அக்பரின் வாழ்வில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி.

தான்சேன் அக்பரின் அரசவையை அலங்கரித்த இசை மேதை ஆவார். அவர் கேட்போரின் மனதை மயக்கும் வகையில் மிகச்சிறப்பாக பாடக் கூடியவர்.

ஒரு நாள் அக்பரின் அவையில் பாடிக் கொண்டிருந்தார். Continue reading “தெய்வீக இசை – சிறுகதை”