ஏ மச்சான் எனக்கு மட்டும் இப்படி நடக்குது
நான் என்ன பாவம் செஞ்சு புட்டேன் நெஞ்சம் வதைக்குது
பூ வச்சேன் புழுதி மண்ணில் விழுந்து போச்சுது
சாந்து பொட்டும் கூட சடுதியிலே கரையலாச்சுது
நன்றி சொல்லும் பண்பாடு
புத்தரிசி வந்துருச்சு…
புது மஞ்சள் காத்திருக்கு….
அச்சமின்றி சூரியனை …
அனைவருமே வணங்கவென்று…
வந்திடும் பொங்கல்…
வளம் தந்திடும் என்றும்…
தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…
உழவனுக்கு உயர்வு தரும் நாளாய் – தமிழ்
உள்ளம் களிக்க வந்ததொரு பாவாய் – அந்த
உழவனுக்கும் நன்றி சொல்லி
உழுததற்கும் நன்றி சொல்லும்
பொங்கல் – தைப் – பொங்கல்!
பொங்கலோ பொங்கல்!
தமிழர் திருநாள்- கவிதை
போக்கிடம் தெரியாமல் போகட்டும் தீக்குணமே
முகையிடம் வண்டாக ஈர்க்கட்டும் நற்குணமே
தீக்கிரை யாகட்டும் தீராத தீவினைகள்
திக்கெட்டும் பரவட்டும் நீங்காத நல்வினைகள்
அரிதாரம் பூசாத ஆதவனும் பார்வையிட
அணையாத அடுப்பினிலே பொங்கட்டும் பொங்கலுமே