கண்ணதாசன் கனவில் வந்து
என்னை அழைத்தான் – நான்
பண்ணெழுத பக்குவமாய்
சொல்லிக் கொடுத்தான்!
விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை
அருண் மீது விக்டருக்கு ரொம்ப நாட்களாகவே அளவு கடந்த பொறாமை.
அனைத்து ஆசிரியர்களின் நன்மதிப்பையும் பெற்று வகுப்பிலேயே முதலாவதாகத் திகழும் அவனை, ஒரே ஒரு தடவையாவது அனைவர் முன்னிலையிலும் தலைகுனிய வைக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தான்.
Continue reading “விபரீத எண்ணத்தின் விளைவு – சிறுகதை”வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை
கோர்ட் அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
போலீசார் வெங்கட்டை இன்று எப்படியும் பிடித்துக் கொண்டு வந்து ஆஜர் படுத்தி விடுவார்கள். வெங்கட் வந்து டைவர்ஸ் பத்திரத்தில் கையெழுத்து போட்டு விட்டால் சுமதிக்கு டைவர்ஸ் கிடைத்துவிடும்.
சுமதி தன் வக்கீலுடன் நீதிமன்ற வாசலில் ரொம்ப ஆவலுடன் காத்திருக்கிறாள்.
இரண்டரை வருடமாக வாய்தா மேல் வாய்தா வாங்கி வெங்கட் வழக்கை இழுத்தடிக்கிறான்.
Continue reading “வார்த்தை தவறிவிட்டாய் – சிறுகதை”சொல்லாமல் தவிக்கும் சொல் – கவிதை
சொல்ல வேண்டிய சொற்கள்
சுருங்கி மடங்குகையில்
சொல்ல வேண்டியவைகளின்
முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல்
போய் விடுகின்றன!
மெழுகுவர்த்தி – சிறுகதை
மாதவன் சென்ற ஒரு வருடமாகவே எதிலும் எந்தவிதப் பிடிப்புமின்றி கிட்டதட்ட ஓர் யந்திரத்தைப் போல்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
பகல்பொழுது மிகச் சுலபமாகச் சென்று கொண்டிருந்தது.
Continue reading “மெழுகுவர்த்தி – சிறுகதை”