நாம் யாரேனும் ஒருவரைப் பார்க்க நேரும் போது ஒவ்வொருவரும் அவரவர் எண்ணங்களின் படியே பார்ப்பவர்களை எண்ணுகிறோம். இதனைத் தான் தன்னைப் போலவே உலகம் என்று கூறுகின்றனர். இதனை விளக்கும் சிறுநிகழ்ச்சி இதோ.
அது ஒரு நண்பகல் நேரம். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. ஆலமரத்தின் நிழலில் ஒருவன் படுத்து நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். வெயில் அவன் மீதும் பட்டுக் கொண்டிருந்தது.